புதுப்பிக்கப்பட்ட பெண் காவலர்கள் தங்கும் விடுதி காவல் ஆணையர் திறந்து வைத்தார்

2 Min Read

சென்னை, ஜன 14- வெளி மாவட்ட பெண் காவலர்கள் தங்குவதற்காக, சென்னையில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத் தார்.
வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக சென்னை வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலை, அய்சக் தெருவில்

‘பெண் காவலர்கள் ஓய்வு இல்லம்’ பயன் பாட்டில் இருந்தது.
அதை சீரமைத்து, கூடுதல் வசதிகளுடன் கூடிய ஓய்வு இல் லத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் 11.1.2024 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார். வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சீரமைத்து திறக்கப்பட்டுள்ள பெண் காவலர் ஓய்வு இல்லத்தில் 21 அறைகள் உள்ளன. ஓர் அறை யில் இருவர் வீதம் 42 பேர் தங்கலாம். இதுதவிர, ஒரு பொது அறையில் 15 பேர் தங்கலாம். பணி நிமித்தமாக பல்வேறு மாவட்டங் களில் இருந்து சென்னை வரும் பெண் காவலர்கள் இதை பயன் படுத்திக் கொள்ளலாம்.
சேவை கட்டணமாக ஒரு நாள் வாடகையாக ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படும். ஓய்வு இல்லத்தின் நுழைவுவாயில், வெளியேறும் பகுதி, நடைபாதையில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. ரோந்து பணிக்கு செல் லும் பெண் காவலர்கள் பாது காப்பான நிலையிலேயே உள் ளனர்.
எனவே, நீங்கள் (செய்தியா ளர்கள்) கேட்பதுபோல அவர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அவ சியம் இல்லை. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பணியை இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள் திடீரென நேரில் சென்று கண்காணிக்க உள்ளனர்.

காணும் பொங்கலை முன் னிட்டு சென்னையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. பொதுமக்களும் கட்டுப்பாடுகளுடன் கொண் டாட்டத்தில் ஈடுபட வேண்டும். மக்களவை தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளை காவல் துறை தொடங்கி விட்டது.

இதற்காக கட்டுப்பாட்டு அறை யும் திறக்கப்பட்டுள்ளது. தேர் தலை முன்னிட்டு, காவலர்களுக் கான பணியிட மாறுதல் வரும் 31ஆ-ம் தேதியோடு முடிக்கப்பட்டு விடும். இவ்வாறு சென்னை காவல் ஆணையர் கூறினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் (வடக்கு), இணை ஆணையர்கள் அபிஷேக் தீட்சித், தேவராணி (போக்குவரத்து), துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *