இஸ்ரேலில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல் பன்னாட்டு ஊடக அமைப்பு கண்டனம்

2 Min Read

டெல்அவிவ், அக்.15-  பத்திரிகையா ளர்கள்மீது நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு எதிராக பன்னாட்டு ஊடக அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல்மீது ஹமாஸ் பயங் கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஏவுகணைகளை வீசி தாக் குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந் தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொது மக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரேலின் வான்வெளி தாக் குதல் லெபனான் மீதும் நடத்தப் பட்டது. மற்றும் சிரியாவின் 2 விமான நிலையங்கள் மீதும் தாக் குதல் நடந்தது. லெபனானில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் வீடியோ செய்தியாளரான இசாம் அப்துல்லா என்பவர் கொல்லப்பட் டார். இஸ்ரேலிய படைகள் மற்றும் லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹிஜ்புல்லா இடை யேயான சண்டையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். இது தவிர, பத்திரிகையாளர்கள் 6 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதற்கு பன்னாட்டு ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுபற்றி அல் ஜசீரா ஊடகம் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் பீரங்கியின் குண்டுவீச்சு தாக்குதலா லேயே அப்துல்லா கொல்லப் பட்டார். பத்திரிகையாளர்கள் என்பதற்கான மேலாடையை அணிந் திருந்தபோதும், பல்வேறு செய்தியாளர்கள்மீது இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள் ளன என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் குடும்பத் தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந் தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் அல் ஜசீரா வின் 2 செய்தியாளர்கள் காய மடைந்து உள்ளனர். ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் செய்தி நிறுவனம் தன்னுடைய 2 செய்தியாளர்கள் தாக்குதலில் காயமடைந்து உள்ள னர் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று அசோசியேட் டட் பிரஸ் செய்தி நிறுவனமும், கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது என தெரிவித்து உள்ளது. அப்துல்லா நிகழ் காட்சிப் பதிவு (லைவ் வீடியோ பதிவை) வழங்கி கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார் என ராய்ட் டர்ஸ் தெரிவித்து உள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *