அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவிகளுக் கான இறகுப் பந்து போட்டி 10.10.2023 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.அதில் பெரியார் பள்ளி மாணவிகள் 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் பூஜாசிறீ ஒற்றையர் போட்டியில் முதலிடம் பிடித்தார். இரட்டையர் பிரிவில் பூஜாசிறீ மற்றும் அய்ஸ்வர்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இருவரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகி யோரை பள்ளி தாளாளர், முதல்வர் ,இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.
பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இறகுப் பந்து போட்டியில் முதலிடம்!
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books