(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
கோட்சேயும், ஜின்னாவும் ஒன்றா?
‘துக்ளக்குக்கு’ப் பதிலடிகள்
கேள்வி: மதச்சார்பு விஷயத்தில், நேருவிற்கும், மோடிக் கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்: நேருவின் மதச்சார்பின்மை, ஹிந்து மதத்தை வெறுக்கும் மதச்சார்பின்மை. மோடியின் மதச்சார் பின்மை, ஹிந்து மதத்தையும் ஏற்கும் மதச்சார்பின்மை.
நமது பதிலடி: ஓ, அப்படியா? மசூதியை இடித்து விட்டு ராமன் கோயிலைக் கட்டுகிற மோடி ‘பிரான்’ மதச்சார்பின்மைக்காரரா? சபாஷ்! சபாஷ்!!
கேள்வி: திருச்சி சிவா எம்.பி., ‘இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 370-அய் மீண்டும் நடைமுறைப் படுத்துவோம்’ என்று சொல்ல அவசியம் என்ன?
பதில்: தமிழகத்தில் சுளையாக 6% முஸ்லிம் வாக்குகள். அதைப் பெற, அரசியல் சட்டப்பிரிவு 370 மட்டும் என்ன காஷ்மீரையே கொடுக்கலாமே!
நமது பதிலடி: ஆக தமிழ்நாட்டில் 6 விழுக்காடு முஸ்லிம்களின் வாக்குகளை திமுக வாங்குவது உறுதி என்று ‘துக்ளக்’ ஒப்புக் கொண்டு விட்டது. 303 பிஜேபி எம்.பி.க்களில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு முஸ்லீம் எம்.பி. உண்டா? குடி உரிமை சட்டம் யாரைக் குறி வைக்கிறது? குருமூர்த்தி அய்யர்வாள் பதில் சொல்வாரா?
கேள்வி: ‘திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த கட்சிதான் தி.மு.க.. இரண்டும் ஒன்றுதான்’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறாரே?
பதில்: நூற்றுக்கு நூறு போடலாம். முதுமையில் ஈ.வெ.ரா செய்து கொண்ட ஒரு திருமணத்தை ஏற்க மறுத்து பிரிந்தது தி.மு.க.. ஒன்றல்ல, இரண்டு மூன்று திருமணங்கள் செய்து கொள்ளலாம் என்று தி.மு.க. ஏற்ற பிறகு, ஒரு திருமணத்தால் அது பிரிந்ததுதான் தவறு. ஸ்டாலின் கூறுவது முற்றிலும் சரி. திருமணம் உள்பட எல்லாவற்றிலும் இரண்டும் ஒன்றுதான்.
நமது பதிலடி: சிவனுக்கு இரண்டு மனைவி; தாருகா வனத்து ரிஷிப்பத்தினிகள் விவகாரம் – முனிவர்கள் சாபம் – லிங்கம் – மேலும் வேண்டுமா? பிர்மாவுக்கு சரஸ்வதி மகளா? மனைவியா? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வக்கின்றி கோணக்கழி வெட்டுகிறது குடுமி.
(இம்மூன்றும் 3.1.2024
துக்ளக்குக்குப் பதிலடிகள்)
– – – – –
கேள்வி: துக்ளக் சர்வாதிகாரியா, சாத்வீகமானவரா?
பதில்: அந்தக்கால துக்ளக், சர்வாதிகாரி. அவரு டைய மறுபிறப்பான சோ கால துக்ளக், சாத்வீகமான சர்வாதிகாரி.
நமது பதிலடி: ஓ – நான் ஒரு அரசியல புரோக்கர் என்று சொன்னாரே, அந்த சோவா?
கேள்வி: ஈ.வெ.ராமசாமி – ராஜாஜி இவர்களுக் கிடையில் இருந்த நட்பு: மு.கருணாநிதி – சோ இவர்களுக்கிடையில் இருந்த நட்பு – இவற்றைப் பற்றி?
பதில்: ராஜாஜியுடனான தனது நட்பு காரணமாக, அவருடைய ஆலோசனையைக் கேட்டுத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வெ.ரா.. சோவுடனான நட்பு காரணமாக, அவருடைய ஆலோசனையைக் கேட்டு கூட்டணிகளை அமைத்துக் கொண்டார் கருணாநிதி
நமது பதிலடி: எவ்வளவு பெரிய அண்டப்புளுகு! ஆகாயப்புளுகு! ராஜாஜி – அந்தத் திருமணத்திற்கு எதிரான கருத்தைத்தான் சொன்னார் என்ற தகவலைத் தெரிந்திருந்தும், இப்படி அவுட்டுத் திரிமனமாக பொய்யை அவிழ்த்துக் கொட்டுவதுதான் இந்தக் குடுமிகளின் வயிற்றுப் பிழைப்பு. ராஜாஜி எழுதிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு இருந்தோமே! அப்பொழுதெல்லாம் கோயங்கா வீட்டில் சேவகம் செய்து கொண்டு இருந்திருப்பாரோ? குருமூர்த்தி.
கேள்வி: பெரும்பாலான ஊடகங்கள், ஆட்சியாளர் களைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் இருக்கும் இன்றைய சூழலில், துக்ளக் மட்டும் ஆட்சியாளர்களின் தவறுகளை தைரியமாகச் சுட்டிக் காட்டுகிறதே, எப்படி?
பதில்: பெரும்பாலான ஊடகங்களுக்கு விளம்பர வருமானம் மூலம் வரக்கூடிய லாபம்
முக்கியம். துக்ளக் கிற்கு நாடு முக்கியம். இதுதான் துக்ளக் துணிவாகவும், மற்ற ஊடகங்கள் மிருதுவாகவும் இருக்கக் காரணம்.
நமது பதிலடி: அப்படியா செய்தி: ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பிஜேபி ஆட்சியைப் பற்றி ‘துக்ளக்’ குறை கூறி எழுதியவற்றைக் கொஞ்சம் பட்டியல் போட்டுக் காட்டலாமே!
கேள்வி: ‘ஜாதியின் பெயரால் பா.ஜ.க.வினர் மக்களைத் தூண்டி விடக் கூடாது’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளது பற்றி?
பதில்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, ஜாதி களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்கிறார் ராஹுல். ஜாதிகளின் பெயரால் ராஹுல் மக்களைத் தூண்டுகிறார் என்று கூற அஞ்சி பா.ஜ.க. பெயரை இழுத்து மறை முகமாக ராஹுலுக்கு சொல்கிறாரோ கார்கே.
நமது பதிலடி: அடடே! இந்த குருமுர்த்தி கூட்டம் எப்போது ஜாதி ஒழிப்பு வீரர்களாக அவதாரம் எடுத்தார்களாம்?
எது எதற்கோ எல்லாம் அவசரம் காட்டும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பிஜேபி அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தீண்டாமை ஒழிக்கப்படு கிறது என்பதற்குப் பதிலாக (17ஆவது பிரிவு – அரசமைப்புச் சட்டம்) ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று ஒரே ஒரு வரியில் சட்டம் இயற்றலாமே!
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஹிந்து ஆகமம் கற்றிருந்தாலும், கோயில் கருவறைக்குள் சென்றால் கடவுள் தீட்டாகி விடும் – செத்துப் போய்விடும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று கதவைத் தட்டும் உச்சிக் குடுமிகளா ஜாதியைப் பற்றிப் பேசுவது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜாதி வாரி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்கிற அரசமைப்புச் சட்டத்தின் மீது சத்தியம் செய்து பதவி ஏற்றவர்கள் இதனை வசதியாக மறந்து விட்டதேன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது – அது தான் எங்கள் கொள்கை என்று பா.ஜ.க.வினர் சொல்லி ஓட்டு கேட்க முன் வருவார்களா?
கேள்வி: மறைந்த தலைவர்களுக்குச் சிலை வைப்பதால் யாருக்கு என்ன லாபம்?பதில்: சிற்பிகளுக்கு, அவர்களுடைய சிற்றாட் களுக்கு, பீடம் அமைக்கும் கொத்தனார்களுக்கு – கூலி; அதைத் திறக்கும் அரசியல்வாதிகளுக்கு – விளம்பரம்; செய்தி. இல்லாமல் திண்டாடும் ஊடகங் களுக்கு – செய்தி. இவர்களுக்கு தற்காலிக லாபம் மட்டுமே. ஆனால் மரங்களை வெட்டியதால், இளைப் பாற, கழிவு செய்ய இடம் இல்லாது தவிக்கும் பறவை களுக்கு, நிரந்தர லாபம்,
நமது பதிலடி: இதில் அயோத்தியில் திறக்கப்பட இருக்கும் ராமன் சிலையும் அகமதாபாத் படேல் சிலையும் சேருமா?
(இவை அய்ந்தும் 10.1.2024
துக்ளக்குக்குப் பதிலடிகள்)
– – – – – –
கேள்வி: ‘அறநிலையத் துறை ஆலய உண்டியல்களில் பணத்தைப் போடாதீர்கள்’ என்று பெரும்பாலோர் சொல்வதன் காரணம் என்ன?
பதில்: உண்டியல் பணத்தை எடுத்து ஹிந்து அறநிலையத் துறை, திராவிட மாடல் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதால் இருக்கலாமே!
நமது பதிலடி: உண்டியலில் பணத்தைப் போட்டால் அதில் உஞ்சி விருத்திகளான பார்ப்பனர்களின் உந்திக் கமலத்திற்குத்தான் போகும் – அந்தப் பொழப்புக் கெட்டு விடுமே என்று அவாளின் பூணூல் துடியாய்த் துடிக்கிறது.
கேள்வி: தமிழ், தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறதா, ஒளிந்து உள்ளதா?
பதில்: ”காட்டுமிராண்டித் தமிழைப் படிக்காவிட்டால் உனக்கு என்ன நட்டம்? ஆங்கிலம் படித்தால் என்ன கேடு?” என்று கேட்ட ஈ.வெ.ரா.வின் பாதையில் சென்ற கழக அரசுகள், தமிழகத்தில் தமிழை மங்க அடித்து விட்டன. இதை அவர்களே மறுக்க முடியாது.
நமது பதிலடி: தமிழை நீஷப் பாஷை என்று கூறும் சங்கராச்சாரி தான் என் மகாமகான் என்று கூறும் குரு மூர்த்திகளா இதை எழுதுவது? புராணக் குப்பைகளைத் தூக்கி எறிந்து தமிழை விஞ்ஞான மொழியாக வளர்க்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து.
கேள்வி: மனதைச் சமநிலையில் வைத்திருக்க என்ன வழி?பதில்: நம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர் களைப் பார்த்துப் பெருமூச்சு விடாமல், நமக்குக் கீழே இருப்பவர்களைப் பார்த்தால், நம்மை இறைவன் எவ்வளவு நல்ல நிலையில் வைத்திருக்கிறார் என்று உணருவோம். அதுதான் மனதைச் சமநிலையில் வைத்திருக்க முதல் படி.
நமது பதிலடி: ஆக தம்மை விடக் கீழ் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து சந்தோஷப்படும் இந்தக் கூட்டத்தை எது கொண்டு சாற்றுவது? தனக்கு மேலே இருப்பவர்கள் கெட்டியாக அப்படியே இருக்க வேண்டும் என்ற பார்ப்பனப் புத்தியையும் கவனிக் கவும்.
கேள்வி: தி.க.வின் பகுத்தறிவுக்கும், தி.மு.க.வின் பகுத்தறிவுக்கும் என்ன வேறுபாடு?
பதில்: பிராமணர்களையும், ஹிந்துக்களையும் தி.க.வைப் போல் இழிவாகப் பேச ஆசைப்படுவது தி.மு.க.வின் பகுத்தறிவு. ‘தி.மு.க. ஆசைப்படுவது போல அவர்களை இழிவாகப் பேசுவது தி.க.வின் பகுத்தறிவு.
நமது பதிலடி: இந்த நாட்டின் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் (வேசி மக்கள்) என்று கூறும் மனுதர்மத்தைப் பற்றி தூக்கிப் பிடித்து எழுதும் மனுவாதி துக்ளக் கும்பலா இதை எழுதுவது? பொறுமைக்கும் எல்லை உண்டு!
கேள்வி: நேருவின் மதச்சார்பின்மை ஹிந்து மதத்தை வெறுக்கும் மதச்சார்பின்மை என்று கூறிய தால் இந்தக் கேள்வி. ‘கோட்சேக்களின் கோட்பாடுகளை ஜீரணிக்க முடியாத காலத்தின் வெறுப்பு’ என்பதை மறுப்பீர்களா?
பதில்: கோட்சேக்களால் ஹிந்து மதத்தையே வெறுப்பவர், ஜின்னாக்களால் இஸ்லாம் மதத்தையே வெறுப்பவருக்குத்தான் சமம் – இதை மறுப்பீர்களா?
நமது பதிலடி: ஆக காந்தியாரைப் படுகொலை செய்த பாதகனான கோட்சேவை விட்டுக் கொடுக்காத வர்கள் பார்ப்பனர் என்பது விளங்கி விட்டதே!
கோட்சே போல சங்கராச்சாரியார்களை எதுவும் செய்யவில்லையே ஜின்னா!
கேள்வி: மேற்கு வங்க எம்.பி. மொய்த்ராவிற்கும், ஹெச்.ராஜாவுக்கும் பேச்சுப் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார்?
பதில்: அது சரிசமமானவர்கள் இடையிலான போட்டி அல்ல. ஒரு பெண்ணுரிமைவாதி கூச்சல் போட ஆரம்பித்தால், அவர் முன் எந்த ஆணும் சமமாக நிற்க முடியாது.
நமது பதிலடி: பெண்ணுரிமைவாதி என்றால் கூச்சல்போடுகிறார்களாம். பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உடையவர்கள் என்று கூறும் மனுதர்மத்தைத் தாங்கிப் பிடிக்கும் இவர்களும் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவர்கள்தான் என்பதை மறந்து விட்டர்களே!
(இவை ஆறும் 17.1.2024
துக்ளக்குக்குப் பதிலடிகள்)