நாடக நல்லதம்பி அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்து

viduthalai
1 Min Read

பட்டுக்கோட்டை, ஜன. 12- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நாடக நல்லதம்பி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அழைக்கப்படும் திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு..நல்லதம்பி அவர்க ளின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் நல்லதம்பி சரோஜா அம்மையார் அவர் களின் 55 ஆம் ஆண்டு வாழ்க்கை இணை ஏற்பு விழா நாளும் 05.01.2024 அன்று நண்பகல் 12 மணியளவில் பள்ளத்தூர் அவர்களது இல்லத்தில் பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலை வர் அத்திவெட்டி பெ..வீரையன் அவர் கள் தலைமையிலும் நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன், மாவட்ட கழக தொழிலா ளர் அணி அமைப்பாளர் முத்து துரைராஜ், சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் நல்லாசிரியர் சி.ஜெகநாதன் முன்னிலையிலும் வாழ்க்கை இணை ஏற்பு விழா கண்டு பிறந்தநாள் காணும் நல்லதம்பி சரோஜா அம்மையார் இணையருக்கு திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் பட்டுக்கோட்டை கழக மாவட்ட பொறுப்பாளர் முனைவர் அதிரடி க..அன்பழகன் ஆடைகள் போர்த்தி சிறப்பு செய்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலை பேசி மூலமாக நல்லதம்பி அவர்களிடம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண் டன், நகர கழக தலைவர் சி.‌சந்திர மோகன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவா ளர் கழக தலைவர் ரெ.திருமேனி, மாவட்ட கழக விவசாய அணி அமைப் பாளர் குறிச்சி பழ.வேதாசலம், பேராவூ ரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கனக.இராமச்சந்திரன், மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், ஒப்பந்ததாரர் கவிஞர் மு.மோகன், பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர் அ.வே.வெள்ளத்துரை, நல்ல.அருணாசலம், நல்ல.அருட்செல் வம், இரா.குமார் உள்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *