பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு நடைப் பயண விழிப்புணர்வு

1 Min Read

சென்னை, ஜன.12 சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி பிரசாந்த் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் இம்மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த வாக்கத்தான் மூலம் மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சுகாதார வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பிற சமூக உறுப் பினர்களை ஒன்றிணைத்து, பொறுப்பான முறையில் வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பதற்கும் கவனச் சிதறல்களைக் குறைப்பதற்குமான ஒரு முயற்சி என்று கூறியுள்ள இம்மருத்துவமனை இதன் மூலம் சாலை விபத்துகளை வெகுவாக குறைப்பதோடு, காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளைத் தடுப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்றும் கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *