இலங்கைக் கடற்படையினர் கைது செய்த மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுத்திடுக!

Viduthalai
2 Min Read

ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

அரசியல்

சென்னை,அக்.17-   இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக் கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது அய்ந்து மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய் சங்கர் அவர்களுக்கு நேற்று (16-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்திய மீனவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட் டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளதாக முதலமைச்சர்  தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 14.10.2023 அன்று  IND-TN-MM-237, IND-TN-10-MM-970, IND-TN-10-MM-56  மற்றும் மிழிஞி- IND-TN-10-MM-708  ஆகிய பதிவு எண்கள் கொண்ட 4 மீன்பிடிப் படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீன வர்களும், மற்றொரு சம்பவத்தில் IND-TN-11-MM-726 பதி வெண் கொண்ட விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர் களும், எல்லை தாண்டி மீன்பிடித்த தாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

தாம் ஏற்கெனவே ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப் பிட்டிருந்ததுபோல, தொடர்ச் சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள்  மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத் தியுள்ளதாகவும், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டுள்ள முதல மைச்சர் இதுபோன்ற சம்பவங் களால் மீனவ சமுதாயக் குடும்பத் தினருக்குப் பொருளாதார இழப் புகள் ஏற்படுவதோடு, இத்தொ ழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத் தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கை களை மேற்கொண்டு, இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப் பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர் களையும், அவர்களது படகுகளை யும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை  முதலமைச்சர்  கேட்டுக் கொண் டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *