பேருந்து போக்குவரத்து ஊழியர் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது

viduthalai
2 Min Read

சென்னை, ஜன 11 தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 9.1.2024 அன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலை யிலும், தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் ஓடின.
இன்றும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

இதற்கிடையில் போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர் வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு மூத்த வழக்குரைஞர் பட் டாபி ரகுராமன் ஆஜராகி முறையிட்டார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நேற்று (10.1.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
அதன்படி, இந்த வழக்கு நேற்று (10.1.2024) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாத அகவிலைப்படி கோரிக்கையை ஏற்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளோம் என்று தொழிற் சங் கங்கள் சார்பில் வாதிடப் பட்டது.

அதன்பின் பேச்சு வார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் வருகிற 19-ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் சட்டவிரோத மாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ள தாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொங்கல் விழாவின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?. போராட்டம் நடத்த உரிமையுள்ளது; விழா நேரத்தில் போராட்டம் நடத்து வது முறையற்றது என்று கூறினர்.

மேலும் அரசும், போக்குவரத்து தொழிற் சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருகின்றீர்கள்?; தீர்வு காண் பதில் என்ன பிரச்சினை உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிக் கப்படுவது மக்கள்தான்; நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராம மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிக மாக திரும் பப் பெறப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன்படி போராட்டத்தை தற்காலிக மாக நிறுத்தி வைத்து நாளைக்கு பணிக்கு திரும்பு வதாக தொழிற் சங்கங்கள் உறுதியளித்துள்ளன. போக் குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதியளிக் கப்பட்டுள் ளது. பணிக்கு வரும் தொழி லாளர் கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் போக்கு வரத்து தொழிலாளர்கள் ஜனவரி 19-ஆம் தேதிவரை வேலை நிறுத்தத் தில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவ தாகவும் சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பணிக்கு திரும்பும் தொழிலாளர்களை அனும திக்க வேண்டும் என்று அரசுக்கும் உத்தர விடப்பட்டுள் ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *