‘ஆவினை அழிக்க கார்ப்பரேட் கைக்கூலிகள் சதி!’ அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

2 Min Read

அரசு, தமிழ்நாடு

நாகர்கோவில், நவ. 24- ஆவின் பால் குறித்த, தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு, அவரின் பெயரைக் குறிப் பிடாமல், தமிழ்நாடு பால் வளத் துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், “அதானியை வளர்ப்பதற்கு பிரதமர் ஓடுவது போல, தமிழ் நாட்டில் உள்ள கார்ப்ப ரேட் நிறுவனங்களை வாழ  வைப்பதற்காக சில கைக்கூலிகள் ஓடிக்  கொண்டிருக்கிறார்கள்” என சாடியுள்ளார். “அதி முக ஆட்சிக் காலத்தில், விவ சாயிகள் வழங்கும் பாலுக்கு தரத்திற்கு ஏற்ற விலையைக் கொடுக்க வில்லை. ஆனால், இப் போது 50% அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. பால் கொள்முதல் செய்த பின்னர் 10 நாட்களில் பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது. 

இது ‘ரஃபேல் வாட்ச்’ கட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் கதை பேசுபவர் களுக்குப் புரியாது; தெரியாது.

அதானி கும்பலை வாழவைக்க எப்படி ஒரு பிரதமர் ஓடுகிறாரோ அதனைப் போன்று இங்கு சில கார்ப்பரேட்  களை வாழவைக்க சில கைக்கூலிகள்  ஓடிக் கொண்டு இருக்கிறார் கள். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தால் நேரடி யாக முதலில் பயன்பெறு கின்றவர்கள் கடைக் கோடி விவசாயிகள்.

இந்த விவசாயிகள் நலனுக்காகத் தொடங்கப் பட்ட ஆவின் நிறுவனத் தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் செயல்படுகிறார் என்றால் அவரை கைக் கூலி அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?. தமிழ்நாட்டில் ஆவின் அசைக்க முடி யாத நிறு வனமாக உள்ளது. இத னால் பால் உற்பத்தியா ளர்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கிறது. வருடம் முழுவதும் விலை கிடைக் கிறது. வட இந்திய நிறு வனங்கள் தமிழ்நாட் டிற்குள் நுழைய முடிய வில்லை. இதனால் ஆவின் பெயரைக் கெடுக்க, நற் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முடியுமா என்று சிலர் பார்க்கி றார்கள்.

ஆவின் பால் பற்றி பரிசோதனை செய்தோம் அதுவும் ‘பெட்’ பாட்டி லில் என்று ஒருவர் சொல்கிறார். ஆவினுக்கு முதலில் ‘பெட்’ பாட் டிலே கிடையாது என்று கூட அவருக்குத் தெரிய வில்லை. அதனால் ஆவின் பால் குறித்த பொய் பிரச்சாரங்களைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்’’ என்று மனோ தங்க ராஜ் குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *