இது அறியாமையா? ஆரியத் தனமா? விஷமத்தனமான விளம்பரம்!

1 Min Read

அரசியல்

சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, வடநாட்டைச் சேர்ந்த ஆலன் இன்ஸ்டியூட் என்ற தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று “இட ஒதுக்கீடு முடிவடைகிறது” என்று பெரிய தலைப்பிட்டு விளம்பரம் செய்து வருகிறது.

“பயிற்சியில் சேர்வதற்கான இடங்கள் நிறைவு பெறுகின்றன” என்பதைச் சொல்லுவதற்கு எத்தனையோ சொற்றொடர்கள் இருந்தும் “இட ஒதுக்கீடு முடிவடைகிறது” என்று விளம்பரம் செய்திருப்பது சமூக நீதிக்கு எதிரான விஷமத்தனம் என்று சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளது. “ராஜஸ்தானின் கோட்டா என்னும் பகுதியில் இத்தகைய பயிற்சி மய்யங்கள் கல்வியைப் பந்தயமாக்கி பெரும் கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டு வரும் நிலையில் இந்த விளம்பரத்தின் பின்னணியில் இருப்பது மொழிபெயர்ப்புக் குழப்பமோ, அறியாமையோ அல்ல – ஆரியத்தனமே!” என்று அந்த விளம்பரத்தின் பின்னூட்டத்தில் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இடஒதுக்கீடு, சமூகநீதி என்றாலே ஆதிக்க சக்திகளுக்கு எட்டிக்காயாகக் கசக்கத்தான் செய்யும்!

இடஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது என்றதும் இப்படியெல்லாம் விளம்பரம் செய்து ‘அற்ப சந்தோசம்’ அடைகிறார்களோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *