சேலம்-கிச்சிப்பாளையத்தில் கழகக் கொள்கை விளக்க பரப்புரை பொதுக்கூட்டம்!

viduthalai
1 Min Read

கிச்சிப்பாளையம், டிச. 10- சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 27.12.2023 அன்று மாலை 6:00 மணி முதல் 9 மணி வரை சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கழகக் கொள்கை பரப்புரை பொதுக்கூட்டம், தந்தை பெரியார் நினைவு நாள் 50 ஆம் ஆண்டு நிகழ்வாக கழ கக் காப்பாளர் ஜவகர் தலைமை யில் நடைபெற்றது.

மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் தினேஷ் வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் இளவழகன், மாவட்ட செயலாளர் வைரம், தலைமை கழக அமைப்பாளர் பாலு, மாநகர தலைவர் அரங்க இள வரசன், மாநகர செயலாளர் பூபதி, தொழிலாளர் அணி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் புவனேஸ் வரி தொடக்க உரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தந்தை பெரியார் அய்ம்பதாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் அவரின் இறுதி முழக்க 50 ஆம் ஆண்டு சிறப்பு குறித்தும் பெரியாரின் தொண்டு புரட்சி குறித்தும் மனித சமத்துவத்துக் காக பெரியார் ஆற்றிய பங்கு பணிகள் பற்றியும் விளக்கமாக சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராசு, தொழிலாளர் அணி செயலாளர் கருணா கரன், அமைப்பாளர் கதிர் வேல், வழக்குரைஞர் அணி செல்வகுமார், தாதகாப்பட்டி பகுதி செயலாளர் வீரமணி ராவண பூபதி, அம்மாபேட்டை பகுதி பொறுப்பாளர்கள் குமாரதாசன், இமயவரம்பன், பரமசிவம், ராஜி, சூரமங்கலம் பகுதி பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், தங்கராஜ், பொன்னம்மாபேட்டை பகுதி பொறுப்பாளர்கள் அஸ்தம் பட்டி பொறுப்பாளர் மணி மாறன், அயோத்தியாபட்டினம் பொறுப்பாளர் மாதேஸ்வரன், மாவட்ட இளைஞரணி கலை மணி, மாவட்ட மாணவர் கழக பாஸ்கர் மற்றும் கமலம், துரை முருகன், பாஸ்கர் ஆகிய தோழர் கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் தமிழர் தலைவர் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *