பில்கிஸ் பானு வழக்கு நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.10- பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியதாவது,

‘சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக் கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந் திருக்கிறது.

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிக ளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இடித் துரைத்திருப்பது, அர சியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டிய வர்கள் என்றால் உண்மை களை மறைத்து, நீதி மன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங் குற்ற வாளிகளை விடுவிக்க பிர யத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்ட கால சிறைவாசிகளை – நன்னடத்தையின் அடிப் படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டப்பூர்வ மாக முன் விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடு வது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண் டேன்; ஒரு பெரிய மலை யையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின் றன. நீதிகேட்டு அவர் நடத் திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத் தையும் போராடும் மன உறுதியையும் தருவதா கும்.
அஞ்சாமலும் சலிப் பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக் கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்குரை ஞர்கள் உள்ளிட்ட ஜன நாயக சக்திகள் அனைவ ருக்கும் என் பாராட்டுகள்.’ இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *