‘விடுதலை சந்தா

0 Min Read

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் – அமெரிக்கா, நிறுவநர் தலைவர் அரசர் அருளாளர், தமிழ்நாட்டில் உள்ள 5 நூலகங் களுக்கு ‘விடுதலை’ நாளிதழை அனுப்பி வைக்கும்படி, ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் சிகாகோ தமிழ்க் கட்சித் தலைவர் நம்பிராஜன் வைத்தியலிங்கம் இருந்தார். இவ்விருவரும், 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் 5ஆம் உலகத் திருக்குறள் மாநாட்டை எவ்விதம் நடத்துவது என்பது குறித்து தமிழர் தலைவருடன் கலந்துரையாடினர். இருவருக்கும் ஆசிரியர், ”பெரியார் களஞ்சியம்” புத்தகம் வழங்கி சிறப்பித்தார். (சென்னை, 9.1.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *