உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 Min Read

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 2 இடங்களில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலைகளில் நேற்று (17.10.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயர செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து சிறீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள் ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், உறவி னர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர் களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *