முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, இன்று (10.1.2024) சென்னை, ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ். நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. கே. கோபால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மரு. ந. சுப்பையன் மற்றும் அரசு உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.