பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கைது

1 Min Read

ஈரோடு, அக்.18 புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் அண்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார், திருப்பூர் நகரச் செயலாளர் கேசவன், ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் புஞ்சைபுளியம்பட்டி நகர திமுக செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான சிதம்பரத்தை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சிதம்பரம் புகார் அளித்தார். 

இதையடுத்து, இந்து முன்னணி நிர்வாகிகள் 3 போர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, செல்வராஜை கடந்த மாதம் கைது செய்தனர். 

இந்நிலையில், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமாரை  கைது செய்த காவலர்கள், அவரை சத்தியமங்கலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். 

இதில், செந்தில்குமாரை கோவை மத்திய சிறையில் அக்டோபர் 30-ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், தலைமறைவாகவுள்ள கேசவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *