செய்திச் சுருக்கம்

1 Min Read

கொள்முதல்
உலக முதலீட்டாளர் மாநாட்டில், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார் பில் பன்னாட்டு வாங்குவோர் – விற்போர் சந்திப்பு நிகழ்வு அமைச்சர் தா.மோ.அன்பர சன் தலைமையில் நடை பெற்றதில் 174 நிறுனங்களிடம் இருந்து ரூ.42.11 கோடிக்கு கொள்முதல்கள் செய்யப் பட்டுள்ளன.

ஒப்பந்தம்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன. டாடா, அதானி குழு மம் அதிக அளவில் தமிழ் நாட்டில் முதலீடு செய்கிறது.

சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தகவல்.

பணிக்கு…
உதவி சிறை அலுவலர் கள் பணியிடங்களுக்கு 18ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழ்
நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளர் ச. கோபாலசுந்தரராஜ் அறிவிப்பு.

பரிசீலிக்க...
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங் கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக் கில் வரவு வைப்பது தொடர் பாக அரசு பரிசீலிக்க வேண் டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *