மூடநம்பிக்கை ஒழிப்பு துண்டறிக்கை பிரச்சாரம்

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்  சார்பாக தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு   பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் நாகர்கோவில்  வடசேரி  பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு  குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள்,பகுத்தறிவாளர் கழக மாவட்ட  தலைவர் உ. சிவதாணு, பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னுராசன்,தொழிலாளரணி அமைப்பாளர் கருணாநிதி, கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ்  உட்பட பலரும் கலந்து கொண்டனர் . தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள்  ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *