பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி!

1 Min Read

அரசியல்

இந்திய பள்ளி விளையாட்டுகள்  கூட்டமைப்பு (SGFI) நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி, கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில், திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மு.முகமது ஆதில் பங்கேற்று, வெற்றி வாகை சூடினார். வெற்றி பெற்ற மாணவர் மு.முகமது ஆதில் டிசம்பர் முதல் வாரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில், இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு(SGFI) நடத்தும் 67ஆவது தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அளப்பரிய சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த மாணவரை பள்ளியின் நிறுவனர்,தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *