திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 12.09.2023 அன்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பாரதியார் நாள் மற்றும் சுதந்திர நாள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் தங்கப் பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவர் ஷைபுல் அஜ்மான் ஜெய்லானி வெள்ளிப் பதக்கமும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் பன்னி ரண்டாம் வகுப்பு மாணவர் ஓ.எஸ்.அப்துல் மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.
19 வயதிற்குட்பட்டோருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் பன்னி ரண்டாம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 14 வயதிற்கு உட்பட் டோருக்கான சதுரங்கப் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி சஹானா வெண்கலப் பதக்கம் வென்றார். இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக் கங்களை வென்று மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்ற மேற் கண்ட மாணவர்களையும், பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர்கள் செல்வி.காயத்ரி, செல்வன். கோகுல் மற்றும் சதுரங்கப் பயிற்சியாளர் இலக்கிய ப்ரியா ஆகியோரைப் பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா அவர்களும், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்களும் பாராட்டி மகிழ்ந்தனர்.