காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
சென்னை, அக். 18- சென்னை உட்பட 4 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட் சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2-ஆம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்கிறார் முதல மைச்சர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆலோ சனை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக 2 நாட்கள் ஆய்வுக் கூட்டம் தொடங் கியது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முதலமைச்சர் தலைமையில் நடை பெற்ற கள ஆய்வு கூட்டத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற் றனர். இதில் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய மூன்று மாவட் டங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ளது. குற்ற நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும், காரணங்களும் இங்கு அதிகம் உள்ளன. எனவே, காவல்துறை அதிகபட்ச கவனத்துடன் செயல் பட வேண்டும். கடந்த 2 ஆண்டு களில் மாநிலத்தில் பெரிய அளவில் எந்த ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சி னையும் ஏற்படவில்லை. இதனால் தான் முதலீட்டாளர்களை ஈர்ப்ப தில் முதன்மை மாநிலமாக உள் ளது. இந்த நிலை தொடர காவல் துறை, மாவட்ட நிர்வாகம் ஒன்றி ணைந்து சட்டம்-ஒழுங்கை பாது காத்து, அமைதியான சூழல்நிலவ தேவையான நடவடிக்கை களை தொடர வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா, போதைப் பொருள் புழங்கும் பகுதிகள் கண்டறியப்படும் போது, அப்பகுதி காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், சமூக வலைதளங் களின் மூலம் வன்முறை மற்றும் ஜாதிய கருத்துகளையும், வதந்தி களை பரப்புபவர்களையும் கண் காணிக்க வேண்டும். பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்க ளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல் துறை யின் மீது மக்களுக்கு நல்லெண்ணம், நம்பிக்கை ஏற்படுத்துவது காவல் துறையைச் சேர்ந்த உங்களின் பொறுப்பு. குற்றம் இழைத்தவர் களுக்கு விரைவாக உரிய தண்ட னையைப் பெற்றுதர வேண்டும். ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மனுக்கள் தொடர்பாக, சில மனு தாரர்களை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வுகள் பற்றி கேட்டறிவதற்காக நான் முடிவு செய்திருக்கிறேன். எனவே, ஒவ் வொரு மனுவின் மீதும் முறையான விசாரணை செய்ய வேண்டும்.
வாரந்தோறும் புதன்கிழமை மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள் குறைதீர் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. சில மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. இதுவும்தவிர்க்கப்பட வேண்டும். காவலர்களுக்கு வழங் கப்படும் விடுப்பு உள்ளிட்ட சலு கைகள் மற்றும் வசதிகளை காவல் துறை கண்காணிப்பாளர்கள் கண் காணித்து உறுதி செய்ய வேண்டும். அடுத்து வரும் சில மாதங்கள் மிகவும் முக்கியமானவை. வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரவிருக்கும் விழாக் காலத்தில், பொது இடங்களில் ஏற்படும் மக்கள் நெரிசலைக் கருத் தில் கொண்டு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். நான் கூறிய கருத்துகளை, காவலர் முதல் காவல்கண்காணிப் பாளர் வரை மனதிலே நிறுத்தி, அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தரும்வகையில் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும். சட்டம்-ஒழுங்கினை பேணிக் காத்து, குற்றங்கள் நடை பெறாமல் காத்திட வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.