பழனியில் பரப்புரைப்பயணப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

பழனி, அக். 18- பழனியில் நவம்பர் 1 தமிழர் தலை வர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் குறித்த பழனி மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 8-10-2023, ஞாயிறு காலை 10-30 மணியளவில் பெரியார் கராத்தே பள்ளியில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு தலை மைக் கழக அமைப்பாளர் திருச்சி மு.சேகர் தலை மையேற்றார்.

மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத் தனர்.

மேலும் இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண் டியன்,  மாவட்டச் செய லாளர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசன்,  கருணாநிதி, அருண், கணக்கன்பட்டி சின்னத் துரை, சி.இராதாகிருட்டி ணன், பெ.இரணியன், பழனி செந்தில், மு.ரகு மான், சுப்பிரமணி, உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 எதிர்வரும் 1-11-2023,  அன்று பழனிக்கு வருகை தரும் தமிழர் தலைவரை சிறந்த முறையில் வர வேற்று பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், இக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தோழர்கள், பொது மக்கள் என அனைவரை யும் ஒருங்கிணைத்து பெரும்பயணத்தை வெற்றி பெறச்செய்வது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *