புதுடில்லி, அக்.18 வட இந்திய தொலைக்காட்சிகள் பரப்பும் கொலைவெறி கொள்கைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பன் னாட்டு ஊடகங்கள் தொடர்ந்து மதவெறியைப் பரப்பியும், வன் முறைகளை தூண்டும் விதமாக வேண்டுமென்றே பேசியும் இத னால் மதக்கலவரம் உருவாவதற்கு முதன்மைக்காரணமாக ஒரு நாட் டின் பல முன்னணி ஊடகங்கள் இருப்பது கண்டு பன்னாட்டு ஊட கங்கள் பெரும் அதிர்ச்சி அடைந் துள்ளன.
“ஒரு நாள் விடாமல், ஒவ்வொரு மாலையும், பல கோடி இந்தியர் களின் வீட்டறைகளுக்கு வன்மம் கொண்டு செல்லப்படுகிறது. (தொடர்கிறது) நூற்றுக் கணக்கான இந்த வன்ம விநியோகிஸ்தர தொலைக் காட்சிகள் உள்ளன. இவற்றின் முழு நேர வேலை கொலை வெறியை தூண்டி விடுவது. (தொடர்கிறது) நாட்டின் 100 கோடி ஹிந்து மக்கள் வாழ்வில் சந்திக்கும் எல்லா சிக்கல்களையும் இசுலாமியர்கள் தான் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக் கிறார்கள் என்று வெறுப்புத் தீயை விசிறி ஊதி விடுவது தான் இந்த வட இந்திய தொலைக்காட்சிகளின் முழு நேர வேலை.
வட இந்திய மக்களுக்கும் இந்த வன்மப் பரப்புரை பிடிக்கிறது. வட இந்தியர்கள் தங்கள் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பசி, நோய் , நாளை எப்படி இருக்கும் என்ற அச்சம் – எல்லா சிக்கல்களுக்கும் யாரையாவது பலி கடா ஆக்க முடியாதா என்று வட இந்தியர்கள் தவிக்கையில், அவர்களுக்கு தீனி போடும் விதமாக வட இந்திய தொலைக்காட்சிகள் தினமும் இசுலாமிய வெறுப்பை தொடர்ந்து பரப்புகின்றனர் இதற்கு ஒன்றி யத்தில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், அதன் முன்னணித்தலைவர்களுக்கு நேரடித் தொடர்பு உண்டு மேலும் வட இந்திய ஊடகங்களின் மத வெறுப்பிற்கு துனைபோகின்றனர்
முக்கியமான 7 ஹிந்தி தொலைக் காட்சியின் அன்றாட மாலை நேர விவாதத்தில் தற்போது இசுலாமி யர்களை கொலை செய்தால் இந்தி யாவிற்கு விடிவுகாலம் பிறக்கும், அவர்களை துப்பாக்கிகளால் துளைத்து விடுவது இந்திய நாட்டை காப்பாற்றும் நோக்கம் தான் என்று பேசத்துவங்கிவிட்டனர். இவர்களின் மீது நீதிமன்றம் பலமுறை வெறுப்புப் பேச்சுக்களை பேசுவதை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது. வெறுப்பு பேச்சு பேசுபவர்களின் மீது நட வடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவும் இட்டுவிட்டது. ஆனால் எதுவுமே அவர்களின் காது களுக்கு எட்டவில்லை. தொடர்ந்து வன் மத்தை பரப்பிக்கொண்டே வருகின் றனர். இது தொடர்பாக பன்னாட்டு ஊடகங்களில் அதிர்ச்சி அடைந் துள்ளன.
தமிழ்நாட்டில் வன்முறை பரப்ப முடியாததற்கு பெரியார் காரணம்
தமிழ் நாட்டில் தொலைக் காட்சிகள் வட இந்திய ஊடகங்கள் அளவிற்கு வன்மப் பரப்புரை செய்ய முடியாத ஒரே காரணம் நம் தந்தை பெரியார், அவர் முன் னெடுத்த சமூக நீதி புரட்சி, பார்ப் பனீயத்தை தலையில் அடித்து வைக்க வேண்டிய இடத்தில் வைத் துள்ளார்
அறிஞர் அண்ணாவும் கலைஞ ரும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு சிற்றூரிலும் சமத்துவம் சமுகநீதி ஒற்றுமை பகுத்தறிவு என்ற கலவை யால் கட்டியப் திராவிடப் பெருஞ்சுவர் மற்றும் வள்ளுவனின் “பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற உன்னத கருத்துக்கள் தமிழ் நாட் டில் வேரூன்றி உள்ளது இதனால் மத நல்லிணக்கம். இங்கே செழித்து உள்ளது. இவை தான் மதவாதத்தை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுப்புச்சுவராக உள்ளது.