கழகத்தின் களப் பணிகள்

viduthalai
10 Min Read

தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்

தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு:

புதுச்சேரி

புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 03-01-2024 மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராஜன் தலைமை தாங்கினார். தோழியர் ஜெ.வாசுகி நெறியாளுகைச் செய்தார்.

திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன் வரவேற் புரை நிகழ்த்த, தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலை வர் மு. குப்புசாமி, மாநிலப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார், எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் இளவரசிசங்கர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே. அன்பரசன் ஆகியோர் உரையாற்றினர்.
மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் கோ.கிருஷ்ணராசு 93 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கும் அவரின் இணையர் கி.தன லட்சுமி ஆகிய இருவருக்கும் பயனாடை அணிவித்தும் நினைவுப் பரிசு வழங்கியும் அவரின் கழக செயல்பாட்டைப் பாராட்டியும் உரையாற்றினார்.
2024 ஆம் புத்தாண்டில் அரசியல் – சமூக சூழ்நிலையில் பெரியாரின் தேவைகள் என்ற தலைப்பில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான பூ. மூர்த்தி கருத்துரை வழங்கினார். மதவாதிகள் பிடியிலிருந்து இந்தியாவை மீட் டெடுக்க பெரியார் என்ற பேராயுதம் மட்டுமே சம்மட்டி அடி கொடுக்கும் என்று பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி 45 நிமிடங்கள் உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

நிகழ்ச்சியில் திராவிடர் கழகக் காப்பாளர் இர. இராசு, மாவட்டச் செயலாளர் கி. அறிவழகன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார், பெ.ஆதிநாராயணன், உழவர்கரை நகராட்சி தலைவர் சு.துளசிராமன், துளசி.கல்பனா, பகுத்தறி வாளர் கழகத் தோழியர் அனிதா பாலகிருஷ்ணன், எ.பி.நாக ராசன் வில்லியனூர் கொம்யூன் தலைவர் கு. உலகநாதன் செயலாளர்கள் களஞ்சியம் வெங்கடேசன் இரா. ஆதிநாரா யணன், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தினா, லாரன்ஸ்,பரத், உபேர், அண்ணா பேரவை சிவ இளங்கோ, சிந்தனையாளர் பேரவை பொதுச் செயலாளர் கவிஞர்.கலியபெருமாள், தோழர் வீர.மோகன், லாரன்ஸ், சாலை சாம்பசிவம், வெற்றிவேல், ப.சுரேஷ், பீம்சேனாத் தலை வர் பழனிச்சாமி, பிரகாஷ் அமைப்பு சாரா தொழிலாளரணித் தோழியர்கள் கயல்விழி, மஞ்சுளா,சந்தியா,அம்சவல்லி,சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.

நாகர்கோயில்

தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் “சிறப்பு கூட்டம்-நூல்கள் அறிமுக விழா எழுச்சியோடு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள், பகுத்தறிவு போராளி விடுதலை ஆசிரியர் கி.வீரமணி 91ஆவது பிறந்தநாள் விழா மலர் ,வாழ்வியல் சிந்தனை பாகம்-17 ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், இன உணர்வாளர் களும், மெட் பொறியியல்கல்லூரி நிர்வாகி பேராசிரியர் மகா தேவன் உள்ளிட்ட பெருமக்களும் கழகத் தோழர்களும் புத்தகங்களை பெற்று மகிழ்ந்தனர்.

கழக சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வி எழுச்சி யுடன் சிறப்புரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். மாவட்டத் தலைவர் மா. மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ .வெற்றி வேந்தன் பங்கேற்று தொடக்கவுரையாற்றி விழாவினை ஒருங்கிணைத்தார்.

மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், இந்திய தேசிய காங்கிரஸ் வாக்குச்சாவடி பிரிவு மாநில தலைவர் இராதாகிருஷ்னன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பேராசிரியர் சி.சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், இலக்கிய ஆய்வாளர் சி.காப்பித்துரை ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் வரவேற்புரை ஆற்றினார். கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் மு.இராஜசேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் எ.ச. காந்தி, சந்தோஷ், அரிஷ் மற்றும் பலர் பங் கேற்றனர். கழக கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை நன்றிகூறினார். தோழர்கள் நூல்களை பெற்றுச் சென்றனர்.

ஆண்டிமடம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் 29.12.2023 வெள்ளி மாலை 6 மணியளவில் தொடங்கி ஆண்டி மடத்தில் நடைபெற்றது ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன் தலைமையேற்க, மாவட்ட இளைஞரணி தலைவர் க. கார்த்திக் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகம்

கழக காப்பாளர் சு. மணிவண்ணன் பொதுக்குழு உறுப் பினர் சி. காமராஜ், மாவட்ட இணை செயலாளர் ரத்தின. ராமச்சந்திரன் மாவட்ட துணை தலைவர் இரா.திலீபன், மாவட்ட துணை செயலாளர் பொன். செந்தில்குமார், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் மு. கோபால கிருஷ்ணன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரை யாற்றியதை தொடர்ந்து கழக செயலவை தலைவர் சு.அறிவுக் கரசு மிகச் சிறப்பாக தந்தை பெரியாரின் தத்துவங்களையும் அவர் ஆற்றிய பெரும் பணிகளையும், இறுதி முழக்கத்தின் சாராம்சங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் டி எஸ் கே.அண்ணாமலை நன்றி கூறினார்.

பங்கேற்றோர்: மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர் ,மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா.மதியழகன், செயலாளர் வெ.இளவரசன், ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ.ராம கிருஷ் ணன், இராவண கோபால், நகர தலைவர் ந.சுந்தரம் ஒன்றிய துணைச் செயலாளர் த.கு. பன்னீர்செல்வம் நகர அமைப்பாளர் டைல்ஸ்’ பட்டுசாமி ஒன்றிய இளைஞரணி தலைவர் வே. செந்தில் ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா. கருணாநிதி ஒன்றிய செயலாளர் துரை. பிரபாக ரன்,அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந் தாமணி ராமச்சந்திரன், ஒன்றிய செய லாளர் பி. வெங்கடாசலம் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், இராஜேந்திரன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத் தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் கே .எம். சேகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மு ராஜா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ப. மதியழகன் அரியலூர் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் வி.ஜி. மணிகண்டன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கி. கமலக்கண்ணன் ஆண்டிமடம் பசுந்தரமூர்த்தி, சுந்தரி பழனி, மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் மு. ரஜினிகாந்த், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா. கருணாநிதி,ஒன்றிய செயலாளர் துரை. பிரபாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன் அமைப்பாளர் மு.கோபால்,,தென்னூர் செல்வ ரங்கம் ஆண்டிமடம் ஜானகி வேல்முருகன் பிரியா கார்த்தி கேயன், வே.இனியா, கா.சமரன் , தமிழினியன், யாழ் இனியன், ஆனந்தி ,பிரியா, சத்யா, அழகாபுரம் பெரியசாமி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

ஓமலூர்

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற்றும் 50 ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் ஓமலூரில் 28-12-2023 அன்று ஓமலூர் பேருந்து நிலையம் அருகே ஓமலூர் ஒன்றிய தலை வர் பெ.சவுந்திரராசன் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.

திராவிடர் கழகம்

மேட்டூர் மாவட்ட செயலாளர் பா.கலைவாணன் வர வேற்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு தலைமை கழக அமைப் பாளர் கா.நா‌.பாலு, மாவட்ட தலைவர் கா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர். கழகத்தின் காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் தொடக்கவுரை ஆற்றினார்.

கழக பேச்சாளர் இராம.அன்பழகன், கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்கள். கூட்டத் தில் மேட்டூர் நகர தலைவர் கலையரசன், மேட்டூர் நகர துணை செயலாளர் சி சீனிவாசன், மேட்டூர் நகர செயலா ளர் மு.நேரு, மேட்டூர் பெரியார் படிப்பக பொறுப்பாளர் முத்து, தாத்தியம்பட்டி முத்து, மாணவர் கழக வெள்ளாளர் கபிலன், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி. அன்புமதி மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளார் கழக செயலா ளர் சி மதியழகன், மேட்டூர் மாவட்ட ஆசிரியர் அணி கா வேல்முருகன், சிந்தாமணியூர் எல்லப்பன், சிந்தாமணியூர் ராஜா, ஓமலூர் உணவக பொறுப்பாளர் வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாணவர் கழகத்தைச் சார்ந்த வெள்ளார் கபிலன் நன்றி உரையாற்றினார்.

ஊற்றங்கரை
கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் ஊணாம்பாளையம் கிராமத்தில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவுநாள் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் 21.12.2023 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் செ.பொன்முடி தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் த.அறிவரசன், மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்டத் துணைத்தலைவர் வ.ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஒன்றிய இளைஞரணி தலைவர் கோ.சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

திராவிடர் கழகம்

தலைமை கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி, மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், சி.பி.அய்.(எம்) நிர்வாகி இரா. லெனின், பெரியார் பற்றாளர் ப.இரமேஷ் ஆகியோர் பேசினர். திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தலைமைக் கழகச் சொற் பொழிவாளர் காரைக்குடி தி. என்னாரெசு பிராட்லா ஆகி யோர் தந்தைபெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி அவர் இறுதியாக டிசம்பர் 19.12.1973ஆம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் பேசிய பேச்சுகளை விளக்கியும் தந்தை பெரியார் மறைவிற்கு பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் பணிகளை எடுத்துக் கூறியும் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் சித.அருள், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், பர்கூர் ஒன்றியச் செயலாளர் ம.ரகுநாதன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அ.கோ.இராசா, பெரியார்

பெருந்தொண்டர் வே.முருகேசன், சி.பி.அய்.(எம்) வட்ட செயலாளர் கு.மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக அ.இராஜேந்திரன் நன்றி கூறினார். குறிப்பு: ஊணாம்பாளையம் கிராமத்தில் முதன் முதல் தலைமுறையாக மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டில் படிக்க வாய்ப்பு பெற்று முதல்முறையாக மருத்துவம் படித்து வரும் மருத்துவ மாணவி சினேகாவிற்கு கழகச் சொற்பொழி வாளர் தி. என்னாரெசு பிராட்லா பெரியார் நூல்களை வழங்கி தங்களின் மருத்துவ சேவை ஊணாம் பாளையம் கிராமத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டினார்.

மணிகண்டம்-சோமரசன்பேட்டை
27.12.2023 அன்று மாலை 6.00 மணியளவில் மணி

திராவிடர் கழகம்
கண்டம் ஒன்றியம் சோமரசன் பேட்டையில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கதின் 50ஆம் ஆண்டு நிறைவு (டிசம்பர் 19) நாள் நினைவு நாள் பிரச்சார கூட்டம் சு.மகாமணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வரவேற்புரையுடனும் சா.செபஸ்தியான், ஒன்றியதலைவர் தலைமையிலும், மு.நற்குணம், மாவட்ட காப்பாளர், ஞா. ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவர், இரா. மோகன்தாஸ், மாவட்ட செயலாளர், ச.துரைசாமி, நகர தலைவர், பா.சேகர், கோணார் சத்திரம், ம.சங்கிலி,பாப்பா குறிச்சி ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
முனைவர் அதிரடி க. அன்பழகன் (கழக பேச்சாளர்) தந்தை பெரியார் பேசிய பேச்சுகள், அவர் நடத்திய போராட்டங்கள், இறுதியாக பேசிய உணர்ச்சி மிக்க பேச்சுகள் பற்றியும் 1.15 மணி நேரம் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.

கூட்டமுடிவில் சு.இராஜசேகர் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம்

கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்: பிரவீண் குமார், சு.இளங்கோவன், சங்கிலி முத்து, பாலசுப்பிரமணியன், மு.புண்ணியமூர்த்தி, அசோக்குமார், அசோகன், சிவக்குமார், கொடாப்பு, தமிழ்மணி, ரெஜினா பால்ராஜ், மாவட்ட மகளிரணி தி.க. தலைவர், திருச்சி, இசபெல்லா பால்ராஜ், பூலாங்குடி) லி. லிண்டா, ஆலங்குடி, க.கோகுல்ராஜ், மாவட்ட மாணவர் கழக செயலாளர், குணா,ஜெயில்பேட்டை, கார்த்திக், அல்லித் துறை, 25) அசோக்குமார், அசோகன், கார்த்திகேயன், விஜய ராகவன் (துவாக்குடி), இராமதாஸ், தில்லை நகர், மருத நாயகம் (எ) திப்பு, அருண் (தில்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரைப் பற்றிய ஆய்வினை செய்துவருபவர்) கணபதி நகர், உய்யக் கொண்டான் திருமலை மற்றும் தோழர்கள், பொது மக்கள்.

வேடசந்தூர்
பழனி கழகமாவட்டம் வேடசந்தூரில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் 26-12-2023, மாலை6-00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரியார் பெருந்தொண்டர் சி.மாரியப்பன் தலைமையேற்றார்.

ஆ.இராமகிருட்டிணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வழக்குரைஞர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். புலவர் வீர.கலாநிதி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் வி.சி.க., தமிழ்புலிகள் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்டத் தொடக்கத்தில் பழனி.சு.அழகர்சாமி மந்திரமா? தந்திரமா? எனும் மூடநம்பிக்கையொழிப்பு நிகழ்சியை நடத்தினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் திண்டுக்கல் காஞ்சித்துரை நன்றி கூறி நிறைவுசெய்தார்.

நாமக்கல்

தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கழகம் சார்பாக நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் குமார் வரவேற்புரை ஆற்றினார் மாநில ப.க அமைப்பாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ, இந்திய ஜனசங்கம் தலைவர் முத்தசாமி, மதிமுக பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகம்

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *