ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு காளைகளை அவிழ்த்து விடும் பொழுது ஜாதிப் பெயரை சொல்லக்கூடாது

1 Min Read

மதுரை, ஜன.6- தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட் டையும் போற்றும் பொங்கல் விழா தமிழர் திருநாளாக கொண் டாடப்படுகிறது. இந்த விழா நாட் களில் தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான காளைகளை அடக்கும் ஜல்லிக் கட்டு கோலாகலமாக நடக்கிறது.
மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர், பாலமேடு மற்றும் அவனி யாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கள் உலக புகழ்பெற்றவை. தமிழ் நாடு முழுவதுமே ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரை மாவட்டத் தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு. இந்த மூன்று போட்டிகளை யும் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முதல் உள்ளூர் பார்வை யாளர்கள் வரை மதுரை மாவட் டத்தின் இந்த கிராமங்களுக்கு போட்டி நடக்கும் நாட்களில் திரள்வார்கள்.
நடப்பு ஆண்டும் வழக்கம் போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி யும் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ஆம் தேதி யும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மதுரை ஜல்லிக் கட்டுப் போட்டிகளில் ஜாதியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், காளையின் உரிமையாளர் பெய ரோடு ஜாதியின் பெயரை குறிப் பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது எனவும் உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தீண்டாமை உறுதி மொழி எடுப்பது குறித்து மனுதார ரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *