ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!

1 Min Read

தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங் புதுமைக்குப் பெயர்போன நிறு வனம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சாம்சங், தற்போது டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் ஆக்சசரி, டிவியை அடுத்து ஸ்மார்ட் ரிங் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த மோதிரத்தை உங்கள் விரலில் அணிந்துகொண்டால் நீங்கள் ஃபிட்னஸ் வாட்ச் அணிந்திருப்பதற்கு சமம். எப்படி எனக் கேட்கிறீர்களா? 

சாம்சங் ஸ்மார்ட் ரிங்-ல் பிசிபி போர்டில் உள்ளதுபோல மைக்ரோபிராஸசர் கோடுகள் அமைந்திருக்கும். உங்கள் உடலின் கால நிலை, இதயத்துடிப்பு, நடக்கும் வேகம் உள்ளிட்டவற்றை இவை கணித்து துல்லிய மாகக் கூறிவிடும். 

இந்தத் தகவல்களை நீங்கள் உங்கள் கணினி, ஸ்மார்ட்போனில் பார்த்துக்கொள்ளலாம். சாதாரண மோதிரம்போல இருக்கும் இந்த ஸ்மார்ட் ரிங், உங்களது ரத்த அழுத்தத்தைக்கூட கணித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.

இந்த ஸ்மார்ட் ரிங் விற்பனைக்கு வர மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு இன்னும் ஓராண்டுகூட ஆகலாம். எனவே அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சாம்சங் ஸ்மார்ட் ரிங் விற்பனைக்கு வருமென்பது குறிப்பிடத் தக்கது. சாம்சங்கை அடுத்து பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற ஸ்மார்ட் மோதிரங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *