திருக்குறள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

viduthalai
1 Min Read

சென்னை,ஜன.6- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இடைநிலைப் பிரிவில் – சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் தெ.த.சங்கமேஸ்வரன் முதல் பரிசும், மேட்டுப்பாளையம் சச்சிதானந்தஜோதி நிகேதன், பன்னாட்டுப் பள்ளி மாணவன் சி.அகில் இரண்டாம் பரிசுகளும், சிதம்பரம் ஷெம்ஃபோர்ட் பள்ளி மாணவி பா.வர்ஷா மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.

மேல்நிலைப் பிரிவில் – நன்னிலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பேரளம், மாணவர் ச.கவு.பாவேஷ் பிரசன்னா முதல் பரிசும், சென்னை முகப்பேர் மேற்கு டி.ஏ.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செ.ஷிவானி இரண்டாம் பரிசும், மதுரை மேலூர் சிறீ சுந்தரேஸ்வரர் வித்யாசாலா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவி மொ.கா.காவ்யபிரியா மூன்றாம் பரிசும் வென்றுள்ளார்.
கல்லூரிப் பிரிவில் – மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மாணவர் மு.மணிவாசகம் முதல் பரிசும், விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அ.பாலபிரியதர்ஷினி இரண்டாம் பரிசும், கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி மாணவி த.சுரேகா மூன்றாம் பரிசும் வென்றுள்ளனர்.

சிறீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய சிறீராம் இலக்கியக் கழகம் நடத்திய இப்போட்டியில் முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ.10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ.7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.5000 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *