“தமிழ்நாடு மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?”

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, ஜன.6- “இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களுக்காகச் செய்தது என்ன?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த விழாவில் 4.1.2024 அன்று பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட தமிழ்நாடு அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது” என்று கூறி வரி பகிர்வு குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது” என்று கூறி ஒன்றிய அரசு இதுவரை வழங்கிய நிதி குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டு விளக்கமளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த விளக்கத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது ‘திராவிட மாடல்’ அரசு.

ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாடு மக்களுக்காகச் செய்தது என்ன? ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு” என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *