நெய்வேலியில் நடைபெற்ற தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

1 Min Read

அரசியல்

தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட இளைஞரணி சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைப்பெற்றது மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா மாணிக்கவேல் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ.வேலு தலைமையில், மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீ.வெங்கடேசன், அமைப்பாளர்  சி.தர்மலிங்கம் முன்னணி ஏற்றனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம் தொடக்கவுரையாற்றினார்.  யாழ் திலிபன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கழக பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன்,  ஒன்றிய செயலாளர்  ந.கனகராசு, கிளை தலைவர் தங்க.பாஸ்கர், கு.இரத்தினசபாபதி, திருநாவுக்கரசு, தீபக்ராஜ்,  திராவிடன், பெரியார் மணி மற்றும் தோழர்கள் கலந்துக் கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *