அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..

Viduthalai
1 Min Read

அரசியல்

அரசியல்

கந்தர்வகோட்டை, அக். 19- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கலைத் திரு விழா போட்டிகள் நடைப்பெற்றது.

போட்டி தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி தலைமை  வகித்தார். கலைத் திரு விழாவில் கவின் கலை, நுண்கலை பிரிவில் ஒவியம், வரைதல், வரைந்து வண்ணம் தீட்டுதல்,அழகு கையெ ழுத்து, மனதில் பதிந்த இயற்கை காட்சிகள், களிமண் சுதை வேலைப்பாடு, செதுக்கு சிற்பம், இசை வாய்ப்பாடு பிரிவில் மெல்லிசை, செவ்வியல் இசை, நாட்டுபுற பாடல், வில்லுப்பாட்டு, கருவி இசை, கும்மி நடனம் தனிநடனம், கிரா மிய நடனம், செவ்வியல் நடனம், நாடகப் பிரிவில் தனிநபர் நடிப்பு, நகைச் சுவை வழங்குதல், பல குரல் பேச்சு, மொழித்திறன் பிரிவில் கதை எழுதல், பேச்சுப்பேட்டி, கட் டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைப்பெற்றது.

இப்போட்டிகளில் மாணவர் கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட னர்.

இப்போட்டிகளை மருத்துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி இலக் கியா, துணைத் தலைவி வேதநாயகி,  வார்டு உறுப்பினர் கல்ராணி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு பாராட்டினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மய்ய ஒன் றிய ஒருங்கிணைப்பாளர் ரகம துல்லா  பேசும் போது  மாணவ, மாணவிகள் சிறப்பான வாய்ப்பு களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார். 

இந்நிகழ் வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், வெள்ளைச் சாமி, தன லெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *