தெற்கு நத்தம் வழக்குரைஞர் மதியழகன் இல்ல மணவிழா

1 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

தஞ்சாவூர்,அக்.19- தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் தெற்குநத்தம் திராவிடர் கழக வழக்குரைஞர் அ.மதியழகன் – அறிவுக்கண்ணு ஆகியோரது 2ஆவது மகள் ம.வீரச்செல்வி, (விரி வுரையாளர், தந்தை ரோவர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர்), தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட் டம், பம்படையூர், வசந்தம் நகர் நா.சுப்பிரமணியன், பத்மாவதி ஆகியோரது மகன் சு. வெங்கடேஷ், (தமிழ்நாடு சிறப்புக் காவலர், திருச்சி) ஆகியோரது திருமணம் உரத்தநாடு வீரரெத்தின மகாலில் 18.10.2023 அன்று மேனாள் உரத்த நாடு சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப் பினர் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி அவர்களது தலைமையில் நடை பெற்றது.

மேனாள் சட்டமன்ற உறுப் பினர் மா.இராமச்சந்திரன், மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் முன் னிலை வகித்தார். தஞ்சாவூர் மாவட்டத் திராவிடர் கழக தலை வர், வழக்குரைஞர் சி.அமர்சிங் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தந்தை பெரியார் கொள்கையினை ஏற்று இதுபோன்ற ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராள மாக நடக்க வேண்டும், பார்ப்பனர் களை வைத்து சாஸ்திரம், சடங்கு கள் செய்யாமல் தோழர்களை அழைத்து அல்லது குடும்பத்தில் உள்ள மூத்தவர்களை அழைத்து இதுபோன்ற விழாக்களை நடத்த வேண்டும் என வழக்குரைஞர் சி.அமர் சிங் வாழ்த்துரை வழங்கினார்.

மூத்த வழக்குரைஞர் பொன்.முருகையன்  வரவேற்புரையாற்றி னார். மாநில கழக கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் விழாவை ஒருங்கிணைத்தார். மூத்த வழக்குரைஞர் மா.பாலை யன், ஸி.மைனர், கி.ஈஸ்வரன், 

ஸி.திராவிடச்செல்வன், ம.நாகரா ஜன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன், ஒரத்த நாடு ஒன்றிய கழக துணைத் தலை வர் இரா.துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுப்ரமணியன் மற்றும் தொழி லதிபர் ஈரோடு சந்திரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தனர். வழக்குரைஞர் ஏ.தனபா லன் நன்றியுரைக் கூற விழா சிறப்பாக நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *