தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, “வள்ளியம்மாள் சுப்பைய்யன் தென்கொண்டாள் அறக்கட்டளை” சார்பில் பெரும்புலவர் இராமநாதன் அவர்களின் அண்ணன் மகனும், பொறியாளர் பழனிராஜாவின் சகோதரருமான சு.கிள்ளிவளவன், தனது நிலத்திலிருந்து 10 சென்ட் இடத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த மகிழ்வில் மூன்று விடுதலை ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.6000/- வழங்கினார். உடுமலை வடிவேல் சந்தா தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் ஒப்படைத்தார்.