* சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதுதான்!
* சொல்லப்பட்ட கருத்திலிருந்து பின் வாங்கவில்லை!
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவே வழக்கு!
பிரதமர் – அமித்ஷாவை பதவி நீக்கம் செய்வார்களா?
‘பேரலை’ இணையதளத்தில் ‘கோடாங்கி’ சிறப்புச் செய்தி!
* திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு நான்!
* நான் பேசுவதெல்லாம் திராவிட இயக்க முன்னோடிகள் பின்பற்றுபவைதான்!
* கடவுள் மறுப்புக் கொள்கையை பின்பற்ற எனக்கு உரிமை உண்டு!
* தி.மு.க.வின் பொறுப்பாளராக, ஒரு அமைச்சராக பேசவேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு!
* நான் பேசியது மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை; இதிலிருந்து நான் பின்வாங்கவேண்டிய அவசியமில்லை!
*பிரதமர் மோடி – அமித்ஷா ஆகியோரும்கூட மதச்சார்பின்மைக்கு விரோதமான கருத்துகளை மக்கள் மன்றத்தில் பேசியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கோவ் – வாரண்டோ பிறக்கப்படுமா?‘பேரலை’ இணையதள தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ‘கோடங்கி’ சிறப்பு செய்தி வருமாறு:-
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்று அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதற்குப் பிறகு, அவர் எப்படி அமைச்சராகத் தொடரலாம்- அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அதனை இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த பிரமாணப் பத்திரத்தில், “நான் அமைச்சராக பேச வில்லை, தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்துகளைத் தான் பேசினேன்” என்று சொல்லி இருப்பதாக ஒரு “வதந்தி” – உலா வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்? தன்னுடைய சொந்தக் கருத்து என்றும், அதைப்பற்றி யாருக்கும் பேசுவதற்கு உரிமை இல்லை என்றும் சொன்னாரா? அல்லது இந்தக் கருத்துகளில் பின் வாங்காமல் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறாரா என்பதைப் பற்றித்தான் இன்றைய கோடாங்கி!
தங்கவேல் என்பவருடைய மகன் மனோகர் என்பவர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த விசாரணை இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நீதிபதி அனிதா சுமந்த் இதனை விசாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார்.
அதில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தன்னுடைய விளக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமைச்சர் உண்மையில் பின்வாங்கினாரா, இல்லையா? என் பதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் அமைச்சர் குறிப்பிட்டி ருக்கக் கூடிய ஒரு கருத்து, இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழ்நாட்டில் காலூன்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சி!
இந்த வழக்கை பதிவு செய்தவர், தன்னை இந்து முன்னணியின் நிர்வாகி என்று காட்டிக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாக அதனை ஒப்புக் கொள்கிறார். ஆக, இந்து முன்னணி என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்பு, தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றிவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.சினுடைய சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அப்படி முயற்சி செய்யும் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுவது இந்து முன்னணி அமைப்பு. பி.ஜே.பி.க்கும் இவர்களுக்கும் அரசியல் ரீதியாக கருத்தியல் ரீதியாக பல்வேறு ஒற்றுமை களும் பல்வேறு தொடர்புகளும் இருப்பது வெளிப்படையான உண்மை.
நீதிமன்றத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்த முயற்சி!
எனவே இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக குற்றம் சாட்டவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குதானே தவிர, உண்மையில் இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிப்பதே இந்த நீதிமன்றத்தின் மாண்பைக் குலைப்பதாக இருக்கிறது. நீதிமன்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மாண்பமை நீதிமன்றத்தின் மூலமாக அரசியல் ரீதியாக வும், சமூக ரீதியாகவும் எழுப்பப்பட்ட காலம் காலமான கேள்விகளை எல்லாம் இங்கு தீர்த்துக் கொள்ளலாம் என்று இப்போது இங்கே வந்து இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.
திராவிட இயக்கம் என்பது சமூக நீதி, சுயமரியாதை, பகுத் தறிவுச் சிந்தனை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்து கிறது. ஆனால் எதிர்மனுதாரர்களோ ஜாதிரீதியான பிளவு களை ஆதரித்து பேசுபவர்கள். அதே வேளையில் இந்த அமைப்பு பி.ஜே.பி.யோடு நேரடியாக தொடர்புடைய அமைப்பாகவும், பி.ஜே.பி.க்கு ஆதரவு அளிக்கும் அமைப் பாகவும் அறியப்படுகிறது. இந்த அமைப்பின் ஆதரவைப் பெற்ற பி.ஜே.பி. தமிழ்நாட்டின் அரசியல் அரங்கத்தில் தி.மு.க.வுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார்கள்!
அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்கள் மன்றத்தில் உரையாடப்பட வேண்டியவற்றையெல்லாம், தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலம் நடத்துவதற்கு இந்த அமைப்புகள் திட்டமிட்டு இந்த வழக்கை தொடர்ந்திருக் கிறார்கள். அரசியல் அரங்கத்தில் இந்தக் கருத்துகள் எடு படாமல் தொடர்ந்து தோற்று ஓடிக் கொண்டிருக்கும் பி.ஜே.பி. நீதிமன்றத்தின் மூலமாக எந்த விதமான நீதி பரிபாலனக் கேள்விகளும் இல்லாத ஒரு வழக்கை எடுத்து வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
மக்கள் மன்றத்தில் இந்தப் பிரச்சினையை விவாதமாக்கி இருக்க வேண்டும், நீதிமன்றம் என்பது அரசியல், கருத்தியல், இறையியல் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மன்றம் அல்ல, இவை எல்லாம் மக்கள் மன்றத்தில் வைத்து பேசப்பட வேண் டியவை. உங்களுக்கு துணிச்சல் இருந்தால் மக்கள் மன்றத்தில் என்னைச் சந்தித்து இந்த விவாதங்களை நடத்துங்கள், ஏன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்ற கேள்வி யைத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பி இருக்கிறார்!
நான் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு!
மக்கள் பெரும்பான்மையானவர்கள் என்னை ஆதரிக் கிறார்கள். திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். அதனால் தான் எனக்கு வாக்களித்து எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். மேலும் இந்த திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாக நான் இந்தச் சிந்தனைகளையெல்லாம் பேச வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.
தி.மு.க.வின் அடிப்படையான கொள்கைகளும் இதுதான். நான் திராவிட இயக்கத்தின் ஒலியேந்தியாக முன்னின்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பேசுவது எல்லாம் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளாகிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் எங் கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பின்பற்றுபவைதான்.
இதைத்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக் கிய அண்ணல் அம்பேத்கர் பேசியிருக்கிறார். நான் பேசியது மக்கள் எதிர்பார்ப்பு. நான் பேசியது மக்களுக்கு நான் ஆற்றவேண்டிய கடமை. இதிலிருந்து நான் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை என்று சுட்டிக்காட்டி யிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் இந்த வாதத்தில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25அய் மீண்டும், மீண்டும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக் கிறார்கள். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 என்ன சொல்கிறது என்றால், ஒரு மதத்தை பின்பற்றுவதற்கும் மறுப்பதற்குமான உரிமை பற்றிப் பேசுகிறது. அதேவேளையில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25 என்னுடைய உளச்சான்றின் படி பணியாற் றுவதற்கான உரிமையை எனக்கு வழங்கி இருக்கிறது.
அதன் அடிப்படையில் நான் கடவுள் மறுப்புக் கொள் கையை பின்பற்றுவதற்கும் எனக்கு உரிமை உண்டு. அதை நான் பின்பற்றுகிறேன் என்ற காரணத்தினாலேயே நான் ஒரு மதத்தை எதிர்க்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அந்த மதத்தில் இருக்கக் கூடிய அழுக்கான சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. அந்தக் கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நீதிமன்றத்தில் வைத்து
விவாதிக்கப்பட வேண்டிய பொருள் அல்ல!
இந்த வழக்கைப் பொறுத்தவரையில், கோவ் – வாரண்டோ (Quo Warranto) என்னும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட் டிருக்கிறது. இந்த கோவ்- – வாரண்டோ என்பது என்னுடைய நியமனத்தில் ஏதாவது சிக்கல் இருந்தால் அதில் கேள்வி எழுப்பலாம், அல்லது நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு விரோதமாக செயல்பட்டிருந்தால் அதிலிருந்து கேள்வி எழுப்பலாம், இல்லாவிட்டால் என்னை பதவி நீக்கம்தான் செய்யப்பட வேண்டும் என்றாலுங்கூட அது முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படக் கூடியதே தவிர, நீதிமன்றத்தில் வைத்து விவாதிக்கப்படக் கூடிய பொருள் அல்ல, முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதி என்னை அமைச்சரவை பொறுப்பில் இருந்து நீக்கலாம், ஆனால் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு சில அடிப்படையான முகாந்திரங்களை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இல் குறிப்பிட்டிருக்கிறது.
அதில் இருக்கக் கூடிய எந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் நான் தகுதி இழக்கவில்லை. தகுதி இழக்காத என்னை பதவி நீக்கச் சொல்லி கோருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பா.ஜ.க. அரசு மீது
நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறார்!
மேலும் இந்தக் கருத்துகளுக்கெல்லாம் என்னை பதவி நீக்க வேண்டும் என்றால் சில முக்கிய முன் உதாரணங்களை சுட்டிக் காட்டுகிறேன் என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசை நேரடியாக தாக்கி இருக்கிறார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மக்களவை உறுப்பினரும் இந்த வழக்கின் வழக்குரைஞருமாக செயல்பட்டு வரும் எம்.பி. வில்சனும்.
இந்த வழக்கில் நீங்கள் தீர்ப்பளிக்கும் போது அது ஒன்றிய அமைச்சரவையையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கி றார்கள். அது யூனியன் கேபினட்டில் இருக்கக் கூடிய 42 சதவிகித பேரின் மீது தீவிரமான குற்றச் செயலிலான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
33 கேபினட் அமைச்சர்களில் 4 பேர் மீது கொலை வழக்கோ அல்லது கொலை முயற்சி வழக்கோ நிலுவையில் இருக்கிறது. தனிப்பட்ட கருத்துகளையோ அல்லது, ஒரு மதம் குறித்த கருத்துகளையோ விட தீவிரமான மக்கள் விரோத சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது இந்த வழக்குகள் எல்லாம், ஆக, இந்த கோவ் – வாரண்டோ என்பது இந்த அமைச்சர்களின் மீதும் இப்போது விதிக்கப்படுமா? என்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பி இருக்கும் கேள்வி.
மக்களுக்கு விரோதமாக; குறிப்பாக சிறுபான்மையினர் ஆகிய இஸ்லாமியர்களுக்கு எதிராக டெல்லியினுடைய சட்டப்பேரவைத் தேர்தல் 2020 இன் போது அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோர் பேசிய கருத்துகள் எப்போது கவனத்தில் கொள்ளப்படும். அவர்கள் மக்களுக்கு விரோதமாக இஸ் லாமியர்களுக்கு விரோதமாக மதத்திற்கு விரோதமான கருத்துகளைப் பேசியதற்கும் இதே கோவ் – வாரண்டோ பிறப்பிக்கப்படுமா?
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சராகிய அமித்ஷா, ஒன்றிய பிர தமராகிய நரேந்திர மோடி ஆகியோரும் கூட மதச்சார்பின் மைக்கு விரோதமான கருத்துக்களை மக்கள் மன்றத்தில் பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராகவும், இதே கோவ் – வாரண்டோ மனு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வியை இந்த மனுதாக்கல் செய்த இந்து முன்னணிக்காரரை நோக்கி கடுமையாக எழுப்பி இருக்கிறது இந்த பிரமாணப் பத்திரம்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துகளை விட பலமடங்கு வீரியமான கருத்துகளை இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மனுஸ்மிருதியில் பெண்களுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு எதிராகவும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கக் கூடிய வாதங்களை முன்வைத்து இருக்கிறார்.
மனுஸ்மிருதியில்
குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
‘‘ஒரு பெண்ணானவள் வீட்டில் குழந்தையாகவோ, அல்லது இளம் பெண்ணாகவோ அல்லது வயது முதிர்ந்த பெண்ணாகவோ இருந்தாலும்கூட சுதந்திரமாக எந்தச் செயலையும் செய்யக் கூடாது. ஒரு குழந்தை தந்தையின் கட்டுப்பாட்டிலும், ஒரு இளம் பெண் கணவனின் கட்டுப்பாட் டிலும் ஒரு விதவைப்பெண் இறந்து போன தன்னுடைய கணவனுக்குப் பிறந்த மகன்களின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும்” என்று மனுஸ்மிருதியில் சேப்டர் 5 ஸ்லோகங்கள் 148 மற்றும் 149 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம் 145 இல் என்ன குறிப்பிடப்பட்டிரு க்கிறது என்றால் ‘‘எல்லா விதமான அறமும் கெட்டு காமத்தில் பலியாக எல்லா நல்ல செயல்களிலிருந்தும் விடுவிக்கப்பட்ட வனுமாக, மிகவும் கேவலமான செயல்களில் ஈடுபடுபடுபவராக இருந்தால் கூட ஒரு நல்ல பெண் அந்தக் கணவனை கடவு ளாக நினைத்து வணங்க வேண்டும்” என்று இந்து ஸ்லோ கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்பதை இந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஸ்லோகம் 168 இல் குறிப்பிடப்பட்டதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ‘‘ஒரு பெண் தன்னுடைய கணவன் உயிருடன் இருந்தாலும், அல்லது இறந்தாலும் அவறுக்குக் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் இதே மனுஸ்மிருதி, ஒரு ஆண் தன்னுடைய மனைவி இறந்த பிறகு எந்தத் தீக்கு தன்னுடைய மனைவியை இரையாக் கினானோ அதே தீயில் இன்னொரு பெண்ணை மணந்து கொள்ளலாம்” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது என்பதை இந்த மனுவில் விளக்கி இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சூத்திரர் ஒருவர் பிராமணருக்குச் சேவை செய்து அடிமையாக வாழ வேண்டும்!
மேலும் Munusmiriti On Lower Castes என்னும் தலைப்பில் 21, 22 சேப்டர் 8இல் ஸ்லோகம் மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டிருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.
‘‘சூத்திரர் ஒருவர் கல்வி கற்றால், அல்லது சூத்திரர் ஒருவர் சட்டத்தைப் பற்றி பேசினால், அந்த அரசு சகதியில் விழுந்த பசுவைப் போல மூழ்கி அழிந்து போகும்” என்று குறிப்பிட்டிரு க்கிறார்கள்.
‘‘இருப்பிறப்பாளர்களுக்கு எப்போதும் சேவை செய்பவர் களாக சூத்திரர்கள் இருக்க வேண்டும்” என்று சேப்டர் 8 இல் இருக்கும் ஸ்லோகம் 410 குறிப்பிடுகிறது.
ஸ்லோகம் 413ம், 414ம் என்ன சொல்கிறது என்றால் ‘‘ஒரு சூத்திரர் ஒருவர் அடிமைவாழ்வு வாழ வேண்டும். பிரா மணர்க்கு சேவை செய்து அடிமையாக வாழ வேண்டும். தன்னுடைய முதலாளி அவருக்கு விடுதலை கொடுத் தாலுங்கூட அவர் தன்னுடைய அடிமை வாழ்வில் இருந்து விடுதலை பெற முடியாது. ஏனென்றால் அவர் பிறப்பால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.” யாரால் அதை நீக்க முடியும் என்று சொல்கிறது 413 மற்றும் 414 ஆவது ஸ்லோகங்கள்.
மேலும் ‘‘ஒரு சூத்திரர் ஒருவர் பணம் சம்பாதிக்க வழி இருந்தாலும் அவர் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம் பாதித்தால் பிராமணர்களுக்கு எதிரானதாக அது மாறி விடும்” என்று மனுஸ்மிருதியில் ஸ்லோகம் 129 சேப்டர் 8 இல் குறிப்பிடப்பட்டிரு க்கிறது.
பிராமணர் ஒருவர் பாலோ, உப்போ அல்லது கறியோ விற்றால் அவர் மூன்று நாட்களில் சூத்திரராக மாறி விடுவார் என்று பகுதி 10 ஸ்லோகம் 92இல் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மனுஸ்மிருதியில் ‘‘ஒரு பிராமணருக்கு எதிரான கருத்தை சூத்திரர் ஒருவர் கொண்டிருந்தால் அவர் நரகத்திற்கு போவார். பிராமணர் ஒருவரை சூத்திரர் ஒருவர் மிரட்டினால் நூறு ஆண்டுகள் நரக வாழ்வும், அவரை அடித்து விட்டால் ஆயிரம் ஆண்டுகள் நரக வாழ்வும் அவருக்கு விதிக்கப்படும்” என்று இந்த மனு தர்ம சாஸ்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டி ருக்கிறது.
ஒவ்வொருவருக்குமான தண்டனை ஒவ்வொரு மாதிரி யாக வழங்கப்பட்டிருக்கிறது. பகுதி 8 ஸ்லோகம் 267, 268இல் குறிப்பிடப்பட்டிருப்பது, ‘‘ஒரு பிராமணர்க்கு எதிரான குற்றச் செயலுக்கு சத்திரியருக்கு 100 பணம் அபராதமும், வைசிய ருக்கு 150 பணம் அல்லது அபராதமும், சூத்திரர்க்கு மரண தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்” என்று சொல் கிறார்கள்.
பிறப்பின் அடிப்படையில் ஒருவர் மீது இழைக்கப்படும் குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டி ருக்கிறது. சத்திரியன் ஒருவருக்கு எதிரான குற்றத்தை பிராமணர் செய்தால் அவ ருக்கு அபராதம் 50 பணம், ஒரு வைசியருக்கு எதிரான குற்றத்தை பிராமணர் செய்தால் அபராதம் 25 பணம்.
ஆனால் சூத்திரர்க்கு எதிரான குற்றத்தைச் செய்தால் அவருக்கு அபராதம் 12 பணம். இதுதான் இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் மனு நீதி. ஒருவர் மூன்று உலகத்தையும் கொன்று அழித்திருந்தாலும், அவர் பிறருடைய உணவைப் பிடுங்கித் தின்றிருந்தாலும் கூட பிராமணருக்கு அதனால் எந்தவிதமான பாவமும் கிடையாது. அவர் ரிக்வேதத்தை மனதில் வைத்திருந்தால் இவற்றில் இருந்தெல்லாம் அவர் விமோசனம் பெற்றுவிடுவார் என்று மனுநீதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மனுநீதிகள் எல்லாம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. அதுவும் ஆர்ட்டிகள் 25 இன் அடிப்படையில் தான் நடைபெற்று இருக் கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
டாக்டர் அம்பேத்கர் கூறியது என்ன?
மேலும் டிசம்பர் 25, 1927 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் மனுஸ்மிருதியை மகத் சத்தியாகிரகத்தில் (Mahad Satyagraha) கொளுத்தினார். காரணம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமை கோரி அவர் போராடினார். பொதுக்குளத்தில் நீர் எடுக்கும் அந்தப் போராட்டத்தில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டதற்கான காரணம் இவைதான்.
இந்து மதச் சட்டங்களின் அடிப்படையில் இந்த ஒடுக்கு முறைகளை எல்லாம் நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும். அநீதியை மட்டுமே போதிக்கின்ற இந்த எழுத்துகளை எல்லாம் தீயிட்டு கொளுத்த வேண்டும். மதத்தையும், அடிமைத்தனத்தையும் நாம் ஒரு காலமும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் அடிப்படையில் தான் நானும் பேசியிருக் கிறேனே தவிர இதற்கு சற்றும் குறைவாக நான் பேசவில்லை என்று உறுதியாகத் தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் இதே போன்ற சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு ‘தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம், 1947, தமிழ்நாடு தேவதாசிகள் (அர்ப்பணிப்பு தடுப்பு) சட்டம், 1947, இந்து திருமண (தமிழ்நாடு) (திருத்தம்) சட்டம், 1967 (இடை ஜாதி திருமணங்களை ஊக்குவிக்க சுயமரியாதை திருமணங் களை கொண்டு வந்தது)
தமிழ்நாடு இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம் 1989 (TN சட்டம் 1 இன் 1990) பெண்களுக்கு சம உரிமை வழங்கும் பிரிவுகள் 29கி முதல் 29 சி வரையிலான இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் அத்தியாயம் IIA அய் அறிமுகப்படுத்துகிறது
– என்று பல்வேறு சட்டங்களையும் இதன் அடிப்படையில் தான் நாமும் நிறைவேற்றி இருக்கிறோம் அதன் அடியொற் றித்தான் நானும் பேசியிருக்கிறேன்.இதை பேச வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று விரிவாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இருபது பக்கத்திற்கு அவர் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தின் பல்வேறு ‘புள்ளிகள்’ குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. 51 ‘புள்ளிகள்’ அவற்றில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அதில் ஒவ்வொரு வரியும் சனாதனம் ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்பதை இன்னும் தீவிரமாகவும் ஒன்றிய அரசு எப்படி மக்களின் மீது ஒடுக்குமுறையை நிகழ்த் துகிறது. மத சிறுபான்மையினர் மீது தாக்குதலை நடத்துகிறது. ஒன்றிய அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் மீது எவ்வளவு குற்ற வழக்குகள் இருக்கின்றன. எவ்வளவு பேர் கொலைப் படுபாதக குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை யெல்லாம் இந்த பிரமாணப் பத்திரத்தில் விரிவாக தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இதில் எந்த இடத்திலும் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கருத்தை கூறவே இல்லை. ஒரு அமைச்சராக, தி.மு.க.வின் பொறுப்பா ளராக இவற்றிற்கு எதிராக பேச வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது, அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றி வாழும் இந்த நாட்டில் ஒவ்வொருவருக்கும் அந்தக் கடமை இருக்கிறது அந்தக் கடமையைத்தான் நான் செய்தேன் என்பதைத்தான் இந்த வழக்கில் குறிப்பிட்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஒருவேளை ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கைக்கு எதிரான ஒரு சட்டத்தை அரசு இயற்றும் என்றால், அதன் மீது ஒருவர் வழக்குத் தொடரலாம். அதாவது ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறார். அந்த மதத்தை பின்பற்றவே கூடாது என்று ஒரு அரசு சட்டத்தை இயற்றினால் அதற்கு எதிராக பேசலாம், ஆனால் அரசியல் மேடையில் பேசப்பட்ட கருத்துகளை நீதிமன்றத்தில் எடுத்து வந்து, சம்பந்தமே இல்லாத ஒரு வழக்கை தாக்கல் செய்து, கோவ் – வாரண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்து இந்த வழக்கை நடத்திக் கொண்டிருப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது, நீதிமன்றத்தின் மாண்பை கெடுப்பது எந்தவகையிலும் சட்டத்திற்கு உட்படாதது என்று சுட்டிக்காட் டியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சொல்லப்பட்ட கருத்திலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்வாங்கவில்லை!
தப்புத்தப்பாக வதந்திகள் இப்போது பரப்பப்படுகின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று. உண்மையில் இந்த பிரமாணப் பத்திரத்தில் மன்னிப்பை விட சனாதனம் ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்ற விளக்கம் தான் மேலோங்கி இருக்கிறது என்பதே தவிர, எந்த இடத்திலும் மன்னிப்பு கோரப்படவில்லை, எந்த இடத்திலும் சொல்லப் பட்ட கருத்திலிருந்து பின்வாங்கவில்லை என்பதை வில்சன் இந்த பிரமாணப் பத்திரம் மூலமாகவும் தன்னுடைய வாதங் களின் மூலமாகவும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
இவ்வாறு ‘பேரலை’ இணையதள தொலைக்காட்சி ‘கோடங்கி’ சிறப்பு ஒளிபரப்பில் குறிப்பிட்டு இருந்தது.
நன்றி: ‘முரசொலி’,19.10.2023