தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மாவட்ட ஆட்சியர் உள்பட 17 காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை!

3 Min Read

தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை, ஜன.4- தூத்துக்குடி துப்பாக் கிச் சூடு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2018ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடைபெற்ற போராட்டத் தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெக தீசன் தலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் 18.5.2022 அன்று அளித்த அறிக்கையின் மீது, அமைச்சர வையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் மீது, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கைகள் வருமாறு:-
* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங் கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ.65 லட்சம், முதலமைச் சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
* போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிவாரண தொகையாக மொத்தம் ரூ.93 லட்சம் வழங்கப்பட்டது.
* போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புல னாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப் பட்ட வழக்குகளை தவிர 38 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை
* போராட்டத்தில் கலந்து கொண்ட பரத்ராஜ் என்பவர் பாளையங் கோட்டை மத்திய சிறையில் இறந்த தால், அவரின் தாயாருக்கு நிவாரண தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப் பட்டது.
* போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்ட 38 வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர்களின் உயர் கல்விக் காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
* ஆணையத்தின் பரிந்துரை அடிப் படையில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
* சைலேஷ் குமார் யாதவ், கபில்குமார் சி.சரத்கர் ஆகிய அய்.பி.எஸ்.அதிகாரி கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல்துறை கண்காணிப்பாளர் கள் மற்றும் 2 காவல்துறை ஆய்வாளர் கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை
* இதுதவிர காவல்துறை ஆய்வா ளர் ஒருவர், காவல்துறை உதவி ஆய்வா ளர் ஒருவர் மற்றும் தலைமைக்காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* பெருந்தண்டனை குற்றப் பிரி வின் கீழ் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், 2 இரண்டாம் நிலை காவலர். ஒரு முதல்நிலை காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை காவலர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
* விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பரிந்துரை அடிப் படையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *