அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் மகன்கள் வாரிசு இல்லையா? : ராகுல்காந்தி கேள்வி

Viduthalai
4 Min Read

அரசியல்

அய்ஸ்வால், அக்.19  மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங் கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  மேலும், அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் மகன்கள் குறித்து கேள்வி எழுப்பி ‘வாரிசு அரசியல்’ குறித்தும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார். 

மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, மிசோரத்தில் நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. இதை முன்னிட்டு, அம்மாநில தலைநகர் அய்ஸ்வால் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: 

“மிசோரத்தில் நான் நடைப் பயணம் சென்றபோது இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு கிடைத் ததைப் போன்ற ஒரு வரவேற்பு கிடைத்ததைப் பார்த்தேன். மிசோ ரம் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது மக்களவை உறுப்பினர் பதவி பாஜகவால் பறிக்கப்பட்டபோது, எனக்காக மிசோரம் மக்கள் பிரார்த் தனையில் ஈடுபட்டனர். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இங்கே, அனைத்து மதங் களும், கலாசாரங்களும், வரலாறு களும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டின் அடித்தளத்தை அமைக்க உதவிய கட்சி காங்கிரஸ். அந்த அடித்தளத்தை பாதுகாத்து நாம் சாதனை படைத்துள்ளோம். நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயல்கிறது. அதிகாரத்தைப் பரவ லாக்க வேண்டும்; மக்களிடம் அதி காரம் இருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் தொலை நோக்குப் பார்வை. ஆனால், அனைத்து அதிகாரங்களையும் டில்லியில் குவிக்க வேண்டும்; அனைத்து முடிவுகளும் டில்லியில் இருந்தே எடுக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. இந்தத் தருணத்தில் இந்தியாவின் மதிப்பீடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், இந்தியா எனும் சிந்தனையையும் நாம் பாதுகாக்க வேண்டும். 

வட கிழக்கு மக்களின் மத நம் பிக்கைகள் மீது பாஜகவும், ஆர் எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல்களை நடத்துகின்றன. இந்தியா ஒரு குறிப் பிட்ட சித்தாந்தத்தால் மட்டுமே; ஒரு குறிப்பிட்ட அமைப்பால் மட் டுமே ஆளப்பட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம் பிக்கை. இதைத்தான் நாம் எதிர்க்கிறோம். 

டில்லியால் மிசோரம் ஆளப் படக்கூடாது. ஒரு குறிப்பிட்ட திட்டம் ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால், அதனை மற்ற மாநி லங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கங்கிரஸ் கருது கிறது. உதாரணத்துக்கு, ராஜஸ் தானின் சுகாதாரத் திட்டம், கரு நாடகாவின் சமூக பாதுகாப்பு திட்டம், சத்தீஸ்கரின் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டம் ஆகிய வெற்றிகரமான திட்டங் களை மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இந்த திட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். மிசோரம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருக்கிறது. வயதானவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக வழங்குவது, சமையல் எரிவாயு விலையை ரூ.750 ஆக குறைப்பது, தொழில்முனைவோருக்கு பொரு ளாதார அதிகாரத்தைக் கொடுப்பது ஆகிய வாக்குறுதிகளை நாங்கள் வெற்றி பெற்றால் நிச்சயம் நிறை வேற்றுவோம். 

மிசோரத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதற்கு முக் கியக் காரணம் வேலையின்மைதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப் பதை உறுதி செய்வோம். மிசோ ரத்தின் முழுமையான வளர்ச்சியே எங்களின் இலக்காக இருக்கும். மிசோரத்தில் உள்ள  ZPM, MNF  ஆகிய இரண்டு மாநில கட்சிகளும் பாஜக – ஆர்எஸ்எஸ் மிசோரமுக்குள் நுழைவதற்கான கருவிகளாக உள் ளன. பாஜக – ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு உள்நோக்கங்கள் இருக்கின்றன. வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் மதங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும் என்பதே அது. பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆகியவற்றை சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆர் எஸ்எஸ் தொடங்கியதில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம். கருநாடகாவில் பாஜகவை நாங்கள் தோற்கடித்தோம். தெலங் கானா விலும் தோற்கடிக்க உள் ளோம். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் நாங்கள் பாஜகவை தோற்கடிப்போம். ராஜஸ்தானில் கடந்த முறை பாஜகவை நாங்கள் தோற்கடித்தோம். இம்முறையும் தோற்கடிப்போம். அதே திட்டம் தான் வட கிழக்கு மாநிலத்துக்கும். மிசோரத்திலும் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும். காங்கிரஸ் கட்சி யின் சித்தாந்தத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். 

காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித் ஷா மகன் என்ன செய்கிறார். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற் றிருக்கிறார். இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? சிறு குறு தொழில்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை அளிப்பவை அவைதான். அவர் களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத் துக்கு புத்துயிர் அளிக்க முடியும். ஆனால், பாஜகவின் கொள்கை, சிறு – குறு தொழில் நிறுவனங்களை அழிக்க வேண்டும் என்பதுதான். இதை கருத்தில் கொண்டே ஜிஎஸ்டி அமலாக்கம், பண மதிப் பிழப்பு நடவடிக்கையை பாஜக எடுத்தது. இதன்மூலம் அம்பா னிக்கு உதவியது. சிறிய வணிகர் களை அழித்துவிட்டு பெரிய தொழி லதி பர்களுக்கு உதவுவதுதான் பாஜகவின் திட்டம்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *