சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 38 நாடுகள் பங்கேற்பு

1 Min Read

சென்னை, ஜன.4 சென்னை புத்தகக் காட்சியை நேற்று (3.1.2024) தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து மடலை வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது:
தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதே நேரம் 47-ஆவது புத்தகக் காட்சி பெரும் வெற்றியை பெற எனது வாழ்த்துகள். பபாசிக்கு பாராட்டுகள்.
இந்தாண்டு பன்னாட்டு புத்தகக்காட்சி சென் னையில் ரூ.6 கோடியில் ஜன. 16, 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் 38 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதற்காக 20 இலக்கிய முகவர்களை பயிற்சி தந்து உருவாக்கியுள் ளோம். இவர்கள் எழுத்தாளர் களுக்கும், வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங் களுக்கும் பாலமாக இருப்பார்கள்.
இதுதவிர, இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்கு விக்கும் வகையில் இந்தாண்டு முதல் இளைஞர் இலக்கியத் திரு விழாவும் நடத்தப்பட உள்ளது. நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை பள்ளியிலேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாண வர்களிடம் உரு வாக்க வேண்டும். இவை தமிழ்ப்பற்றை உருவாக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *