யார் பிரதமர்? தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் 7-ஆவது முறையாகவும் ராகுல் காந்தியே முதலிடம்!

2 Min Read

சென்னை,ஜன.4- தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும் என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் தந்தி டிவி கடந்த 7 மாதங்களாக நடத்தி வரும் கருத்துக் கணிப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் தொடர்ந்து அமோக ஆதரவைப் பெற்று வருகிறார்.

பிரதமர் மோடிக்கு குறைவான ஆதரவுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024-அய் முன்வைத்து கடந்த மே மாதம் முதல் தந்தி டிவி, பிரதமர் மோடி- மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை முன்வைத்து தொடர்ந்து கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

1) தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும்?
ராகுல் காந்தி – 69%
பிரதமர் மோடி- 26 %
மற்றவர்கள் – 5%
இதே தலைப்பில் கடந்த 7 மாதங்களாக நடத்தப் பட்ட கருத்து கணிப்பு முடிவுகள்:
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கான ஆதரவு விவரம்:
மே மாதம் – 71%
ஜூன் மாதம் – 70%
ஜூலை, ஆகஸ்ட்டில்- 71%
செப்டம்பரில்- 70%
அக்டோபரில் 70%
நவம்பரில் 69%
பிரதமர் மோடிக்கான ஆதரவு:
மே, ஜூன் மாதங்களில் 29%
ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் 28%
செப்டம்பரில் 30%
அக்டோபரில் 25%
நவம்பரில் 26%

2 ) சமமான கூட்டாட்சிக்கு
யார் பிரதமராக வர வேண்டும்?
ராகுல் காந்தி 68%
பிரதமர் மோடி- 28%
இதே தலைப்பில் கடந்த 7 மாதங்களாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவு விவரம்:
ராகுல் காந்திக்கான 7 மாத ஆதரவு விவரம்:
மே – 69%
ஜூன் – 70%
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் – 71%
அக்டோபர்- 70%
நவம்பர்- 68%
பிரதமர் மோடிக்கான 7 மாத கால ஆதரவு விவரம்:
மே 29%
ஜூன் 30%
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் 29%
அக்டோபர் 28%
நவம்பர்- 28%
இக்கருத்து கணிப்பு மொத்தம் 40 தொகுதிகளில் 2,500 வாக்காளர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாக தந்தி டிவி தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *