கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

3.1.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்க மோடி அரசு முடிவு.
* தேர்வுக் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு மீறிவிட்டதாக கூறி, மோடி அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு.
* புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட வகுப்பினருடன் விவாதிக்காமல், எதிர்க்கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல் என கண்டனம்.
தி டெலிகிராப்:
* இந்தியா கூட்டணியின் அமைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க வாய்ப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் பொதுவில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம். ஏற்கெனவே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்குரைஞர் பதில்.
* பிரதமரின் செல்பி பூத்களின் செலவினத்தை வெளியிட்ட ரயில்வே அதிகாரி தூக்கியடிப்பு.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *