ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசை அகற்றினால்தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் உறுதி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.3- மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
மனித நேயம், மதச்சார் பின்மை, சமூக நீதி, நாடாளு மன்ற ஜனநாயகம், மாநில உரிமைகள் ஆகிய அனைத் தையும் கபளீகரம் செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மத வெறியை பரப்பி மக்களை கூறுபோடும் பாசிச எண்ணத் துடன் செயல்பட்டு வருகி றது. அதனை வீழ்த்தும் சாதனை மிக்க ஆண்டாக 2024 அமைந் திட வேண்டுமென்ற நம்பிக்கை யோடு புத்தாண்டை வர வேற்போம்.

ஒன்றிய பா.ஜ. அரசு மதச் சார்பற்ற ஜனநாயக கூட் டாட்சி அடித்தளம் கொண்ட அரசியல் சாசனத்தின் மீது அடுக்கடுக்கான தாக்குதல் களைத் தொடுத்திட்ட ஆண் டாகவே விடைபெறும் ஆண்டு அமைந்தது.

வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் என்ற இரட்டை இலக் கோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.
வறுமை, வேலையின்மை, விலை உயர்வு, பொதுத்துறை தனியார் மயம், மனுவாத கருத் தியல் பரப்பு, பாலின அடிப்படையிலான அநீதிகள், தீண்டாமை உள்ளிட்ட ஜாதிய சமூகக் கொடுமைகள், சிறு பான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டையே நாசம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை!

தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் வெள்ள சேதத்திற்கு உரிய நிவாரண நிதி கொடுக்க மறுத்து வருவது, மாநிலத்திற் கான நிதி பங்கீட்டை மறுப் பது உள்ளிட்ட பாகுபாட்டு வஞ்சக அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது.

பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழி நடத் தப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதன் மூலமே இந் தியாவையும், இந்திய மக் களையும் பாதுகாக்க முடி யும்.
நாடாளுமன்றத் தேர் தலை நடப்பாண்டில் நாடு சந்திக்கவுள்ள நிலையில், மக் கள் விரோத, எதேச்சதிகார, வகுப்புவாத, வலதுசாரி பாஜ அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண் டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும்.

-இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *