பச்சரிசி, கரும்பு, சர்க்கரையுடன் பொங்கல் பரிசு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

viduthalai
1 Min Read

சென்னை,ஜன.3- ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வுக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு சர்க்கரை யுடன் ரொக்கப்பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்றிரவு வெளியிட் டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தைப்பொங்கல் 2024ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர் களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிருத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று (ரூ.238, 92, 72,741) செலவினம் ஏற்படும்.

கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் அட்டைத் தாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். கரும்பு ஒன்றுக்கு ரூ.33 கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொகப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *