புவனேசுவரில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

viduthalai
1 Min Read

[FEDERATION OF INDIAN RATIONALIST ASSOCIATIONS]
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின தேசிய நிர்வாகக் குழு கூட்டம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில், லோகியா அகாடமி அரங்கில் 31.12.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் நரேந்திர நாயக் தலைமை ஏற்று நடத்தினார்.
வருகை தந்த அனைவரையும் HUMANIST AND RATIONALIST ORGANAISATION, ODISSA  தலைவர் வரவேற்று பேசினார்.
கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுடேஷ் கோடிராவ் அறிக்கை படித்தார்.
HRO அமைப்பின் சாசன தலைவர் தானேஸ்வர் சாகு தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
தொடர்ந்து அமைப்பினை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
பொருளாளர் ஹர்சந்த் சிங் பிந்தர் வரவு செலவு கணக்கினைப் படித்தார்.
அமைப்பிலுள்ள சங்கங்கள் தங்களது செயல்பாட்டு அறிக்கையினை படித்தனர்.
பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகளை பொதுச்செயலாளர் வி.மோகன் அறிக்கையாகப்படித்தார். தொடர்ந்து கூட்டத்தில் அடுத்த நிர்வாகக் குழு கூட்டத்தை ஜூன் 30, 2024 அன்று நடத்திட வேண்டும் என்றும், அதை சென்னையில் நடத்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இறுதியில் தெலங்கானாவைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜேஸ்வர் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம்

மாநில, மாவட்ட ப.க. பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் (புதுவை, 19.11.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *