ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி எறிபந்து போட்டியில் முதலிடம்

Viduthalai
1 Min Read

அரசியல்

அரசியல்

ஜெயங்கொண்டம், அக். 20 – பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 9.10.2023 அன்று நடை பெற்றது.

அதில் அரியலூர், திரு மானூர், ஜி.பழூர், செந் துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற 14, 17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவுகளில் மாண வர்கள் கலந்து கொண்ட னர். அதில் ஜெயங்கொண் டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்கள் 14 மற்றும் 17 வயதிற்குட் பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்து மாநில போட்டிகளில் பங்குபெற தகுதி பெற் றனர். 

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்று வித்த உடற்கல்வி ஆசிரி யர்கள் ராஜேஷ், ரவிசங் கர் மற்றும் ரஞ்சனி ஆகி யோரை பள்ளி தாளாளர் ,முதல்வர், இருபால் ஆசி ரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *