ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி எறிபந்து போட்டியில் முதலிடம்

1 Min Read

அரசியல்

அரசியல்

ஜெயங்கொண்டம், அக். 20 – பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 9.10.2023 அன்று நடை பெற்றது.

அதில் அரியலூர், திரு மானூர், ஜி.பழூர், செந் துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற 14, 17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவுகளில் மாண வர்கள் கலந்து கொண்ட னர். அதில் ஜெயங்கொண் டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்கள் 14 மற்றும் 17 வயதிற்குட் பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்து மாநில போட்டிகளில் பங்குபெற தகுதி பெற் றனர். 

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்று வித்த உடற்கல்வி ஆசிரி யர்கள் ராஜேஷ், ரவிசங் கர் மற்றும் ரஞ்சனி ஆகி யோரை பள்ளி தாளாளர் ,முதல்வர், இருபால் ஆசி ரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *