பேராசை பெருந்தகையே போற்றி! அண்ணா சொன்னதும் பார்ப்பன மாநாட்டுத் தீர்மானங்களும்

viduthalai
1 Min Read

திருச்சி, ஜன.1- தமிழ்நாடு கோயில்களை சிறப்பான முறையில் நிர்வகிக்க, தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிரா மணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத் தின் மகளிரணி மற்றும் இளை ஞரணி மாநாடு திருச்சியில் நேற்று (31.12.2023) நடைபெற்றது.

வரலாறு காணாத பெரும் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடர்பாடுகளை சமாளிக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒன்றிய, மாநில அரசுகளுக்கு மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கூடுதல் நிவார ணத் தொகையை வழங்க வேண் டும். பொருளாதார அடிப்படை யில் நலிந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்.

கேரள மாநில அரசைப்போல, முற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நலிந்தோருக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு நிதியுதவியுடன் நடத்தப் படும் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட் டங்களிலும் தொடங்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளும் நீட் போன்ற தேர் வுகளில் பங்கேற்க முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள் ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிப்பாடங்களை விருப் பப் பாடமாக கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையினரால் நியமிக்கப்பட உள்ள அறங்காவலர் குழு நிய மனங்களில், அந்தந்த கோயில் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் மற்றும் பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட் டில் உள்ள கோயில்களை சிறப் பான முறையில் நிர்வகித்துப் பராமரிக்க உதவும் வகையில், தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும்.

இந்த வாரியத்துக்கான வழி முறைகள், நெறிமுறைகள், நிர்வாக அமைப்பு ஆகியவற்றைப் பரிந் துரை செய்ய, தக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *