வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் நான்கு விழுக்காடு அதிகம்

3 Min Read

 

சென்னை, ஜன. 1- வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ் நாட்டில் 4 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் 20 மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், இதுவரை வானிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரு பெரும் பேரிடர் களை நிகழ்த்தியுள்ளது. கடந்த டிச.3, 4ஆம் தேதிகளில் இடை விடாது பெய்த மழையால் முறையே ஆவடியில் தலா 28 செமீ (மொத்தம் 56 செமீ), நுங்கம் பாக்கத்தில் 23, 24 செமீ (மொத்தம் 47 செமீ), மீனம்பாக்கத்தில் 25, 18 செமீ (மொத்தம் 43 செமீ), தாம் பரத்தில் 17, 23 செமீ (மொத்தம் 40 செமீ), செம்பரம்பாக்கத்தில் 16, 20 செமீ (மொத்தம் 36 செமீ) பதிவாகி யுள்ளது. 4ஆ-ம் தேதி அதிக பட்சமாக பூந்தமல்லியில் 34 செமீ மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் 17-ஆம் தேதி கொட்டித் தீர்த்த கன மழையால் 39 இடங்களில் அதிகன மழையும், 33 இடங்களில் மிக கன மழையும், 12 இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செமீ, திருச்செந்தூரில் 69 செமீ, சிறீவைகுண்டத்தில் 62 செமீ, திருநெல்வேலி மாவட்டம் மூலைக் கரைப்பட்டியில் 61 செமீ, மாஞ்சோலையில் 55 செமீ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 53 செமீ, தென்காசி மாவட்டம் குண் டாறு அணையில் 51 செமீ, திரு நெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செமீ மழை பதிவாகி யுள்ளது.
இவ்விரு பேரிடர்களும் தமிழ் நாட்டு மக்களால் மறக்க முடியாத வரலாற்று பேரிடர்களாக அமைந்துவிட்டன.
கடந்த அக்.1 முதல் டிச.31ஆ-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 46 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த கால கட்டத்தில் வழக்கமாக 44 செமீ மழை கிடைக்கும். இந்த முறை வழக்கத்தைவிட 4 சதவீதம் அதிக மாக மழை கிடைத்துள்ளது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 158 சதவீதம் (133 செமீ), கன்னியாகுமரி மாவட் டத்தில் 97 சதவீதம் (105 செமீ), தூத்துக்குடி மாவட்டத்தில் 84 சதவீதம் (84 செமீ) மழை பதிவாகி யுள்ளது. கள்ளக்குறிச்சியில் 55 சத வீதம் குறைவாக 20 செமீ, கிருஷ்ண கிரியில் 50 சதவீதம் குறைவாக 14 செமீ, பெரம்பரலூரில் 46 சதவீதம் குறைவாக 23 செமீ மழை பதிவாகி யுள்ளது.
மொத்தம் 17 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், நீலகிரி மாவட்டத்தில் வழக்க மானஅளவும், 20 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது குறிப் பிடத்தக்கது. புதுச்சேரியில் 27 சத வீதம் குறைவாகவும், காரைக்காலில் 7 சதவீதம் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது.
6 நாட்களுக்கு மழை
சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதி களில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக் கடலின் மத்தியப் பகுதி களில் நிலவக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 6ஆ-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *