தமிழ்நாட்டில் கனமழைக்குக் காரணம் என்ன? ஆய்வறிக்கை வெளியீடு

1 Min Read

சென்னை, ஜன.1- சமீ பத்தில் சென்னை, தென் மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு காரணம் என்ன? என தனியார் அமைப்பு ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் டிசம்பர் மாதம் கனமழையை எதிர்கொண் டது. பொதுவாக வடகிழக்கு பருவமழை 70 நாட்கள் நீடிக்கும். இது, தமிழக, ஆந்திர கடலோரங்களை தான் அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும்.

கடந்த அக்டோபர் மாத முதல் டிசம்பர் மாதம் வரை 453.70 மில்லி மீட்டர் மழை பெய்தது. இயல்பான மழை என்பது 430.70 மில்லி மீட்டர் ஆகும். தற்போது பெய்தது இயல்பைவிட அதிகமானதாகும்.

காலநிலை மாற்றமே காரணம்

காலநிலை மாற்றம் இந்த கனமழைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சுழற்சி வெப்பச்சலன மேகங்களை உருவாக்கியது.
அதுமட்டுமல்லாமல் கணி சமான வளிமண்டல வேறு பாட்டுக்கு வழி வகுத்து ஈரப்பதம் நிறைந்த கிழக்கு காற்று வலுவாக உயர்ந்ததும் இந்த கன மழைக்கு காரணம் என்பது தெரிகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *