பெண் கல்வியில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடி : அமைச்சர் கீதா ஜீவன்

Viduthalai
3 Min Read

அரசியல்

மதுரை, அக். 20 “பெண் கல்வியில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன் னோடியாக செயல்பட்டு வரு கிறது” என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார்.

 மதுரை பாத்திமா கல்லூரியில் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம், மதுரை காம ராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை பாத்திமா கல்லூரி ஒருங் கிணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் திறன் மேன்பாடு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந் தது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில், “தமிழ் நாடு அரசு பெண்கள் நலனுக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலனை உறுதி செய்திடும் நோக்கில் புதிதாக வாரியம் அமைத்து செயல்படுத்தி உள்ளார்கள். இதன்மூலம் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோரின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி வழங்கி அவர்கள் பொருளாதார சுதந் திரம் அடைந்திட வழிவகை செய் யப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் பெண்களுக்கு எந்த வகையிலும் சம உரிமை வழங்காத பிற்போக்கு சமுதாயமாக இருந்து வந்த நிலையில் கலைஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சட்டங்களையும் திட் டங்களையும் செயல்படுத்தியுள் ளார். அவற்றின் பலனை பெற்று இன்றைய மகளிர் அனைத்து துறையிலும் பல சாதனைகள் புரிந்து வருகிறார். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் திட் டத்தை செயல்படுத்தியவர் கலை ஞர். அதேபோல கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதி உள்ளிட்ட பல் வேறு துறைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். 

பெண் கல்வியில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. பெண் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல பெண்கள் தங்களது சிறு தேவைக்கும் பிறரை எதிர் பாராமல் சுயமாக செயல்படும் வகையில் ஊக்குவித்திட கலை ஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்களை தொழில் முனைவோ ராக உருவாக்கி பொருளாதார சுதந்திரம் பெற்றிடும் நோக்கில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தொழில் முனை வோர் பயிற்சி மற்றும் மானியத் துடன் கடனுதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன. பெண்கள் தங்களது உடல் நலனையும், மன நலனையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்படும் போட்டிகளை தைரிய மாக எதிர்கொள்ள வேண்டும். சிறு தோல்விகளுக்கு துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழக துணை வேந்தர் ஜெ.குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப் பினர் மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, கைம் பெண்கள் மற்றும் ஆதவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் ரேவதி அழகர்சாமி, துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *