எத்தகைய மனித நேயம் பிறந்து அய்ந்து நாட்களே ஆன சிசுவின் உறுப்புகள் கொடை

Viduthalai
1 Min Read

சூரத் அக்.20 குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மூளைச்சாவு அடைந்த காரணத்தினால் அதன் உடல் உறுப்புகள் கொடையாக அளிக் கப்பட்டுள்ளது.  சூரத் நகரில்  அக்டோபர் 13ஆம்  தேதி பிறந்த குழந்தை பிறந்ததில் இருந்தே அழாமல், எந்தவொரு அசைவு மில்லாமல் இருந்துள்ளன. இத னால் உடனடியாக குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு இக் குழந்தை மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது என்று கூறப் படுகிறது. அங்கு ஆண் குழந்தைக்கு வெண்டிலேட்டர் கொண்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சைகள் பலனளிக்காமல் இக் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, தங்கள் குழந் தையின் உடல் உறுப்புகள் கொடை அளிக்கப்படும்.  பட்சத் தில் பல குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளிக் கக்கூடும் என்று அறிந்த பெற்றோர்கள் குழந்தையின் உறுப்புகளை கொடை யாக அளித்து செய்ய ஒப்புதல் அளித்த தாக தெரிகிறது. 

அதனை தொடர்ந்து, அந்த குழந்தையின்  உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், மண்ணீரல், கல் லீரல், 2 கருவிழிகள் உள்ளிட்ட உறுப்புகள் கொடையாக பெறப் பட்டுள்ளது. இந்த சிறுநீரகங்கள் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 10 மாத குழந் தைக்கும், அகமதாபாத் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் 8 மாத குழந்தைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா விலேயே மிக சிறிய குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *