தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு தகவல்

1 Min Read

சென்னை, டிச.31- தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம், ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆட்சிமொழி சட்ட வாரம், சென்னை மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதிவரை வரை கலைப்பண்பாட்டு இயக்கக கூட்டஅரங்கத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

முதல் நாளில் ஆட்சிமொழி சட்ட வரலாறு என்ற தலைப் பில் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் பயிற்சி அளித்தார். ஆட்சிமொழி சட்ட வாரத்தில் ஒரு நிகழ்வாக வணிக நிறு வனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தப்பட்டது. கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவ கங்கள் ஆகியவற்றில் பெயர் பலகைகளை சரியாகத் தமிழ் சொற்களில் எழுதி வைக்கும் பொருட்டு, வணிகர் சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டது.

27-ஆம் தேதியன்று ஆட்சிமொழி சட்ட வார விழிப் புணர்வு பேரணியை சென்னை மாநில கல்லூரியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் தொடங்கி வைத்தார். இப்பேர ணியில் மாநில கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாநில கல்லூரியில் படிக்கும் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *