Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ஒழிய வேண்டும் உயர்வு – தாழ்வுக் கொடுமை – தந்தை பெரியார்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
கட்டுரைதந்தை பெரியார்

ஒழிய வேண்டும் உயர்வு – தாழ்வுக் கொடுமை – தந்தை பெரியார்

Last updated: December 31, 2023 2:45 pm
Published December 31, 2023
சிறப்புக் கட்டுரை, தந்தை பெரியார்
SHARE

 

 

ஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே!
16.10.1930ஆம் தேதி குடிஅரசு தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்” 4000 ஜாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டதோடு அந்த ஜாதிகளே தான் எல்லா பஞ்சம ஜாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள ஜாதி ஆதாரங்களை எடுத்துக் காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் மேற்படி ஜாதிக்கிரமத்தை அதாவது ஆதி ஜாதி என்பவை களான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அந்த ஜாதிக் கிரம வார்த் தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற் றிலும் தாங்கள் நாலாம் ஜாதி என்றும் ஒரு கற் பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்ட வர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாயிருக்க வேறு பல ஜாதிகள் ஏற்பட்டு இருப் பதாகவும் அவர்கள் தான் “பள்ளு பறை பதினெட்டு ஜாதிகள்” என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வடமொழிப் படி பார்த்தாலும் சரி, தென் மொழிப் படி பார்த்தாலும் சரி, வேளாளர் 4ஆவது ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதி லிருந்து அறியக் கிடக்கின்றது.
அந்தப்படி கூறப்படும் பள்ளு, பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் “பணி செய்யும் பதினெண் வகை ஜாதியார்” என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இவை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணை வாணிகன், ஒச்சனகல் தச்சன், வண்ணான், குயவன், கொல்லன் கோயிற் குடியன், தச்சன், தட்டான், நாவிதன் பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட் டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)
ஆனால் இதே பதினெண் மக்களை அபிதான கோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள் களாக, சிவிகையர், (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணை வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதி னெட்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் “கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும், உப்பமைப்ப வர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்” என்று குறிக்கப் பட்டிருக்கின்றது.
இவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்ன வென்றால் சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளான் செட்டிகள். இவர்கள் சோழ புரத்தார், சித்தக் காட்டார், பஞ்சுக்காரர், முதலிய பல திறப்பட்டவர்கள். இதற்கடுத்தப்படியிலுள்ளோர் கார் காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர். இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தப்படியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாமிச போசனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம் படியர், அவரிற் தாழ்ந்தோர் மறவர். அவரிற் தாழ்ந்தோர் கள்ளர். அவரிற் தாழ்ந்தோர் இடையர். இவர்கட் கடுத்தபடியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்த படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இவற்றுள் எதிலும் “பிராமணர்கள்” விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும், தாழ்வு கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபனையோ சொல்லுவதற்குச் சிறிதும் இட மில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக் கவனித் தால் ஜாதியின் சூழ்ச்சித்தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி சத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆட்சேபனைகளும் சத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங் களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவுபடுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியட்சமாய் காண்கின்றோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் ஜாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் “பிராமணர்கள்” என்று சொல்லிக் கொள்ளும் பார்ப் பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்டவர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வா தாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதா ரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன் படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.
எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள். அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது “விபசாரம்” “கீழ் மேல் ஜாதி கலப்பு” என்று சொல்லும் படியான இழிதன்மையில் பிறந்த வர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவ மாயிருக்கின்றதை யாரும் மறுக்கமுடியாதென்று உறுதி கூறுவோம்.
மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர ஜாதிக் கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப் பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபனையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப் பாய் சொல்லுவோம்.
இவை ஒருபுற மிருக்க இந்த ஜாதிக் கிரமத்தில் பார்ப் பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற் படுத்தப்பட்டிருக் கும் யோக்கியதைகளை யும், உரிமை களையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத் தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர் கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதி பேரை சொல்லிக் கொள்ள முடியாத படியும் அதை கனவிலும் நினைக்க முடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது “நாலாவது ஜாதியார்களாக சூத்தி ரர்கள் என்று சொல் லப்படும் வகுப்பாருக் குப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கும் உரிமையானது எப்படி இருக்கின்றது”. என்று பார்த்தால் இப் போது “பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்” (அதாவது கிரிமினல்ட்ரைப்) என்று சொல்லக் கூடிய வர்களுக்குச் சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்பந்தத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிது கூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரி யாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரண மாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.
அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.
“ஸ்நாத மவம், கஜமத்தம் ரிஷபம்
காம மோஹிதம் சூத்தரமக்ஷரசம்
யுக்தம் தூரதப் பரிவர்ஜையேல்”
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.
“ஜப, தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ்
ஜய, மந்தர சாதனம் தேவதாரா
தனம் சசய்வதிரீ சூத்திர பத தானிஷள்”
அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.
“நபடேல் சமகிருதம் வாணீம்” (சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்.
“நைவ சாதிரம் படே நைவ
சுருணுபாத் வைதி காக்ஷரம்
நநாயாது தயால் பூர்வம்
தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்”
(சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட் கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத் திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.
“இதிஹாச புராணானி
நபடேச்ரோது மர்ஹசி”
இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.
“சாதுர்வர்னியம்
மயாசிருஷ்டம்
பரிசரியாத் மகம்
கர்மம் சூத்ரஸியாபி பாவனாம்” (கீதா லோகம்)
நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்குப் பிராமண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.
இது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.
எந்த காரணத்தாலோ இந்து மதத் தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டிய தல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலி யுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ் வொருவரும் தங்கள் தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.
ஏதோ “பொல்லாத விதிவசத்தினால்” இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் திரு. காந்தியாரும் வருணா சிரமத்தைக் கோரும் “தேசிய” தலைவர்களும் கேட்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒரு காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.
இன்றையதினம் தேசியவாதிகளாய் இருக்கின்ற வர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மையான ஆசை யுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள் ளைக்கார ஆட்சியிருக்கும் போதே ஜாதி வித்தி யாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியதுதான் அறிவுள்ள வேலை யாகும். அதைவிட்டு விட்டு முதலில் “நீ போய் விடு நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொன் னால் அது “தான் சாவதற்குதானே மருந்து குடித்தது” போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொரு வரும் மேல்ஜாதி ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதும் தனக்கு கீழ் பலஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது மான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுக ரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள் கையும், ஜாதி ஆதிக்கத்திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆட்சியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதி கொடுமைகளும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும். என்பதையோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.
இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக் குமானால் இந்தியா ஒரு நாளும் அன்னியர் ஆட் சிக்கோ அடிமைத்தனத்திற்கோ, அடிமையாகி இருக் கவே முடியவே முடியாது. ஆனால் “அம்பேத்கர் களையும், ஜின்னாக்களையும், ராமசாமி முதலியார் களையும், ராதாபாய்களையும் ஏதாவது ஆசைகாட்டி ஏமாற்றி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், இழிவுகளையும் மறைக்க வைத்து எங்கள் நாட்டு ஜாதி உயர்வு தாழ்வு விஷயமும் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டு இழிவுபடுத்தும் சமூகக் கொடுமை விஷயமும் நாங்கள் எப்படியோ சரிப்படுத்திக் கொள்ளுகிறோம். இப்பொழுது நீங்கள் போங்கள்” என்று சொல்லச் செய்து விடலாம். ஆனாலும் நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதை யெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்பட்டு பின் அயலானை வெளியில் போகச் சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றையதினம் உள்ள இழிவையும் கொடுமையையும், அடிமைத்தனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதி வைப்போம்.
ஆகவே எப்படியாவது ஜாதிப் பிரிவையும் அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்று அதற்கு ஆரம்பவிழா செய்ய அடுத்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு சரியான சந்தர்ப்பம் என்றும் அதில் காணப்பட்ட ஜாதியையும், மதத்தையும் தெரிவிக்காதீர்கள் என்றும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.
– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 30.11.1930

Ad imageAd image

You Might Also Like

இந்தியாவையே உலுக்கிய இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்றுக்கு நீதி கிடைத்துவிட்டது! பிரிஜ்வல் ரேவண்ணாவிற்கு எப்போது தண்டனை கிடைக்கும்?

முக அறுவை சிகிச்சை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 2 மந்திரம் திறக்க முடியாத வாயை மருத்துவம் திறந்து விட்டது

புரட்சிக்கவிஞர் கொட்டும் போர்முரசு-முனைவர் துரை.சந்திரசேகரன்

அறுந்துபோன முத்துச்சரம் இந்தியாவிடமிருந்து விலகிப் போன உறவு நாடுகள்-பாணன்

பார்ப்பனியம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!

Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?