திருச்சி, அக்.20 மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் மயானப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் மயான பாதையை ஆக்கிர மித்து சிலர் தண்ணீர்தொட்டி, கழிவறைகள், வீடுகள் அமைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிபதியின் உத்தரவின்பேரில், மருங்காபுரி வட்டாட்சியர் செல்வசுந்தரி தலைமையிலான வருவாய்த் துறையினர் கடந்த அக்.18, 19 தேதிகளில் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொண் டனர். துவரங்குறிச்சி காவல்துறையினர் பாது காப்பு அளித்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது ஆக்கிரமிப்புகாரர்கள் வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமரசம் செய்ததையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மயான பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books